முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > குடியரசு ‌தின‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அடிப்படை உரிமை விழிப்புணர்விற்கு கல்வி அவசியம்!
அரசமைப்புச் சட்டத்தில் நமக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அரை நூற்றாண்டு‌க் காலம் கடந்துவிட்ட நிலையில் எந்த அளவிற்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? ஒரு காவல் அதிகாரியாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

ஆர். நடராஜ்
தமிழக காவல் கூடுதல் தலைமை இயக்குனர்
மாநில மனித உரிமைகள் ஆணையம் - தமிழ்நாடு

webdunia photoWD
இதற்கு காவல்துறை அதிகாரியாக மட்டுமல்ல, இந்திய பிரஜை என்ற முறையிலும் இதற்கு நான் பதில் கூற முடியும். இந்திய அரசியலமைப்புதான் உலகத்திலேயே எழுதப்பட்ட மிகப்பெரிய அரசியல் சாசனம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனிலும் சரி, அமெரிக்காவிலும் சரி எழுதப்பட்ட அரசியல் சாசனம் மிகக் குறைவுதான்.

நம்முடையது எல்லாமே வரையறுக்கப்பட்டு அளிக்கப்பட்ட சாசனம். சிந்தனையாளர்கள், மாபெரும் தலைவர்கள் இயற்றிய சாசனம் அது.

இந்தியாவில் சட்டமும் திட்டமும் நல்லபடியாகத்தான் உள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் உள்ளன. அதாவது இந்திய அரசியல் சாசனத்தில் எல்லாமுமே அடங்கியுள்ளது. அதில் எந்தக் குறையும் இல்லை.

அதற்கு ஒரே ஒரு உதாரணம், பத்து ஆண்டுகளுக்குள் எல்லாருக்கும் கல்வி அறிவு என்ற ஒரு இலக்கு டாக்டர் அம்பேத்கார் நிர்ணயித்துள்ளார். ஆனால் மில்லினியம் தாண்டிய பின்னரும் அந்த இலக்கை எட்டவில்லை. அது அடிப்படை உரிமையில் கல்வி உரிமையை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி 2004ஆம் ஆண்டு 21 ஏ பிரிவில் துவக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையில் சேர்த்தோம். அதாவது அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டுகள் கழித்து இதனை நாம் செய்கின்றோம்.

அதிலும், ஒவ்வொரு மாநில அரசும் வழிமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் இல்லை.

நமது பெரும் பிரச்சனையே அறிவின்மைதான்!

இந்திய நாட்டிற்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை அறிவின்மைதான். நமக்கு என்ன இலக்கு இருக்கிறது, அந்த இலக்கை எப்படி அடையவேண்டும் என்பதை அறிய இயலாமல் போகிறது. அரசியல் சாசனத்தில் நமக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது, சுதந்திர நாட்டில் நாம் எவ்வித உரிமைகளைப் பெறலாம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. நமக்குள்ள உரிமையை தட்டிக் கேட்பதற்கு, முதலில் நமக்கு என்ன உரிமைகள் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

முதலில் தனி மனித உரிமை பாதுகாக்கப்படுகிறதா? அரசு அலுவலகத்திற்குச் சென்றால் தனி மனிதன் ஒருவன் எவ்வாறு நடத்தப்படுகின்றான் என்பதையும், பெரிய மனிதர் ஒருவர் சென்றால் அவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதையும் நாம் பார்க்கிறோம். அதாவது கண்ணியம் காக்கப்படுகிறதா?

கல்வி அறிவு இருந்தால்தான் தங்களுக்குரிய உரிமையை அவர்கள் கேட்டுப் பெற இயலும். அதுவும் சாதாரணக் கல்வி அல்ல. தரமானக் கல்வி பெறுதல் அவசியம்.

சமீபத்தில் ஒரு நேர்காணலைக் கண்டேன். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் நேர்காணல் அது. அதில், இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சினை என்பது அடிப்படைக் கல்வி மக்களுக்கு சரியாகச் சென்று சேரவில்லை. இதில் தனி நபர்கள் ஏன் பங்கேற்கக் கூடாது. பெரிய மனிதர்கள் தாங்களாக முன் வந்து இதற்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

அடிப்படைக் கல்வி அறிவு மனிதர்களுக்குச் சென்று சேர வேண்டியதுதான் மிக மிக முக்கியம். அதில்தான் எல்லாமே அடங்கியுள்ளது.

உயிர், உடமை, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதுதான் அரசியல் சாசனத்தின் முக்கியப் பணி.
1 | 2  >>  
மேலும்
ஏற்றத் தாழ்வைக் களைவோம் : பாபா சாஹேப் அ‌ம்பே‌‌த்கர்!
பெருமைக்குரிய பெரும் தினம்!
எவரெல்லாம் உண்மையான குடிமக்கள்?
கொட்டட்டும் மகளிர் முரசு!