முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > பொ‌ங்க‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏரோட்டும் விவசாயிக்கு ஏரோபிளேன் எப்போது?
- ச‌க்‌தி சேது
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

....இந்த வாசகத்தை இன்றைய நாகரீக - தகவல் தொழில்நுட்ப, இயந்திரகதியாகிப் போன உலகில் நாம் யாரேனும் நினைத்துப் பார்த்து செயல்படுகிறோமா? என்று கேட்டால்...

நிச்சயமாக இல்லை என்பதே 90 விழுக்காட்டினரின் பதிலாக அமையும்.

farmer
webdunia photoWD
அதிகாலையில் சேவல் கூவும் வேளையில் எழுந்து, வயிறார நீர்த்த தண்ணீருடன் கஞ்சியும், பச்சை மிளகாயும், மாவடுவும் சேர்த்து சாப்பிட்டு, அதையே பித்தளை தூக்குச் சட்டியிலும் போட்டு எடுத்துக் கொண்டு, வீட்டின் புழக்கடை தொழுவத்தில், இரவில் சாப்பிட்ட வைக்கோலை அசைபோட்டுக் கொண்டிருக்கும் எருதுகளை அவிழ்த்து, ஏரில் பூட்டி ஊருக்குத் தொலைவில் இருக்கும் வயலை நோக்கிச் சென்ற காலம் எல்லாம் என்னவாயிற்று?

காலைச் சூரியன் கீழ்வானில் சிவந்து, ஒளிப்பிழம்பாக எழுந்து உச்சந்தலைக்கு வருவதற்கு சற்றுமுன், கொண்டுவந்த கட்டுச் சோற்றை அங்கு கிடைக்கும் தினையோ, அக்கம்பக்கத்து வயக்காரர் கொண்டுவந்த கருவாடு, நேத்துவைத்த மீன் குழம்பையோ தொட்டுக் கொண்டு ஒருபிடி பிடித்து, களைப்பு நீங்க வரப்பில் வானமே எல்லையாக சில கண நேரம் கண் அயர்ந்து, மீண்டும் பதறி எழுந்து வயலை ஆழ உழும் வேலையைத் தொடர்ந்த காலம் எங்கே போயிற்று?

மேற்கேயிருந்து செங்கோட்டை பாஸஞ்சர் ரயிலு போயி, மாலைச் சூரியன் மங்கும் வேளையில், உழவை முடித்து, வாய்க்காலில் ஓடும் சேத்துத் தண்ணீரில் கை,கால் கழுவி, மாடுகளுக்கும் தண்ணீர் காட்டி இருள் மங்கும் நேரத்தில் புறப்படுகையில், இளைய மகன் சீனி மிட்டாய் கேட்டானே, இன்னைக்கி என்ன சொல்லி சமாளிக்க.. என்ற யோசனையுடன் வீடு நோக்கிப் செல்கையில்...

"எல. வேலாண்டி, அந்த பெரிய வயலுக்கு தண்ணி அடைக்கச் சொன்னன.. செஞ்சியா.. அப்புறம் உம் பொண்ணு கல்யாணத்துக்கு பணம் கேட்டிருந்தியே எப்ப வந்து வாங்கிக்கப் போறன்னு சொன்னா எனக்கும் வசதியாயிருக்கும்லா.. " என்றவாறே எதிரே வரும் வயல் உரிமையாளருக்கு, 'தண்ணி அடைச்சிடேன் எசமான்.. பணத்த அடுத்த வாரம் வாங்கிக்கறேன்.. ஆனா இப்ப ஒரு சமாச்சாரம். ஐயா தான் பெரிய மனசு பண்ணி தரணும்" என்றவுடன்.

"என்னல சொல்லு... வழக்கம்போல நீ என்ன கேட்டுறப் போற.. துட்டுதானலே..." என அங்கலாய்த்தவாறே வேட்டி மடிப்பில் இருந்து 5 ரூபா பச்சை நோட்ட எசமான் எடுப்பதற்குள், வேலாண்டி மனதில் மகிழ்ச்சித் துள்ளல் ஓடுமே... அந்த துடிப்பும், சந்தோஷமும் இப்போ எங்கே போனது?

மேற்சொன்னதெல்லாம் முன்பொரு காலத்தில்....

"ஏ.. பால்பாண்டி, ஒம் பையன் படிச்சிட்டிருந்தான்லா. அவன் இப்ப என்ன செய்யறான்? அவனை துணைக்கு கூட்டிக்கிட்டு இந்த மரத்தை வெட்டிக் குடேன்".

"உங்களுக்குத் தெரியாதா.. அவன் இப்ப மிலிட்டரிலே சேர்ந்திட்டான்லா. அதுவும் இல்லாம இந்த வயலு, தோட்டம், இதெல்லாம் வேண்டாம்னுதான் அவன வடக்க அவ அக்கா வீட்டுக்கு முன்னயே அனுப்பிட்டேன். இரண்டாவது மவ டவுண் காலேஜிலே படிச்சால்ல. அவளுக்கு காலேஜில இருந்தே வேலைக்கு கூப்பிட்டாங்களாம். அதான் கம்ப்யூட்டருல வேலையாம். எல்லா செலவும் போவ நிறைய ரூபா எனக்கே அனுப்பி வைக்கேன்னு சொல்லிட்டி போனவாரம்தான் போயிச்சு"

"உன்னாலயும் முடியல. எம் மவனுவலும் ஆஸ்திரேலியா, யு.எஸ்-னு போய்ட்டு வாரம் ஒருக்க தான் போன்லேயே பேசுறானுக. ஏரோபிளேன்ல் தினமும் எண்ணூரு மைலு போய் வேலைபார்க்கறனுகளாம். நா மட்டும் இந்த வயசுல வயலக் கட்டிக்கிட்டு என்னத்த பண்ணப்போறம்ல.. பேசாம நீயே வயல எடுத்துக்கிட்டு ஏதாவது கொடுத்துடு. அப்புறம் பயிர்வைக்கிறத பற்றி எனக்குக் கவல இல்ல பாரு. நான்பாட்டுக்கு வீடு உண்டு, கோயில் உண்டுனு நானும் நிம்மதியா இருப்பேன்ல. யோசிச்சு நல்ல முடிவா சொல்லுப்பா... "

இப்போது விஷயத்துக்கு வருவோம். சென்னை போன்ற பெருநகரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
  1 | 2  >> 
மேலும்
பொ‌ங்கு த‌மிழா!
குக்கர் பொங்கல்!
பொங்கலின் நாயகன்!