முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > ‌தீபாவ‌ளி
 
தீபாவளி தினத்தில் கிரிக்கெட் : சில நினைவுகள்!
Webdunia
india pak
webdunia photoWD
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மொஹா‌லி‌யி‌ல் வரும் நவம்பர் 8ம் தேதி, அதாவது தீபாவளிப் பண்டிகையன்று நடைபெறுகிறது.

இதற்கு முன்பும் தீபாவளி தினத்தன்று சில போட்டிகள் நடைபெற்றுள்ளன. சில இனிமையான நினைவுகளும் அந்த போட்டிகள் எழுகின்றன.

1987ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து முதன் முதலாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தின. அக்டோபர் 31ம் தேதி, தீபாவளி தினத்தன்று இந்தியா, நியூசீலாந்து அணியை நாக்பூரில் முக்கியமான போட்டி ஒன்றில் சந்தித்தது.

காலை தீபாவளி வெடிச் சத்தங்கள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஓய்ந்திருந்த நேரம். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அபாரமாக ஆடி வந்த காலம். டாஸ் ஜெயித்து இந்தியா முதலில் பேட் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. நியூசீலாந்து அணித் தலைவர் ஜெஃப் க்ரோவ் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

இந்திய பந்து வீச்சு அப்போது சற்று பலமானதாகவே இருந்தது. கேப்டன் கபில்தேவ், சேத்தன் ஷர்மா, மனோஜ் பிராபாகர், மனிந்தர்சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர்.

நியூசீலாந்து அணியில் மார்டின் க்ரோவ் என்ற பேட்டிங் மேதை இருந்தது இந்திய ரசிகர்களுக்கு அப்போது ஒரு பெரிய கவலை. அவரை வீழ்த்தினால்தான் நியூசீலாந்தை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை.

team
webdunia photoWD
21 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த மார்டின் க்ரோவ் விக்கெட்டை அன்று வீழ்த்தியது யார் என்று தெரிந்தால் ஆச்சர்யம் ஏற்படும். கபில்தேவ் கேப்டனாக இருந்த போது சில புதுமைகளை செய்வார். பந்து வீசமாட்டார் என்று நாம் நினைக்கும் ஒருவரை பந்து வீச அழைப்பார். அன்றும் அப்படித்தான், மொஹமது அசாருதீனை பந்து வீச அழைத்தார் கபில். மார்டின் குரோவ் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அசாருதீன் அன்று 7 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார் என்பது ஒரு இனிமையான நினைவு.

ஒரு நேரத்தில் நியூசீலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் என்று சவாலான இலக்கை நிர்ணயிக்கும் நிலையில்தான் இருந்தனர். அப்போதுதான் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது நம் சேத்தன் ஷர்மா நியூசீலாந்து வீரர்கள் கென் ரூதர்ஃபோர்ட், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஸ்மித், இவான் சாட்ஃபீல்ட் ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து க்ளீன் பவுல்ட் செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஹேட்ரிக் சாதனை புரிந்த வீரரானார் சேத்தன் ஷர்மா. நியூசீலாந்து 221 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி களமிறங்கும்போது மைதானத்திலும் வெளியிலும் பட்டாசு சத்தங்கள் காதை பிளக்க துவங்கின. ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர் பலத்த கரகோஷத்திற்கிடையே களமிறங்கினர். கவாஸ்கர் ஆடும் கடைசி ஒரு நாள் போட்டி அது. ஒரு நாள் சர்வதேச போட்டியில் எப்படியாவது ஒரு சதம் அடித்து விடவேண்டும் என்ற ஆசையுடன் அவர் களமிறங்கினார்.
  1 | 2  >> 
மேலும்
தீபாவளியை தித்திக்க வைக்க
மைதா முறுக்கு
சீப்புச் சீடை
‌சு‌ழிய‌ம்
மாலாடு!
ரவா லட்டு