ஜனவரி 2 : நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமியை பிரிந்தார். கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது என்று பிரசாந்தும், வரதட்சணை கொடுமை செய்தார் என்று கிரகலட்சுமியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 13 : தனது தாயே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றம்சாட்டி நடிகை ப்ரீத்தி வர்மா தலைமறைவானார். பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அவர் தாயை விட்டு பிரிந்து தனது படங்களை நடித்து முடித்துக் கொடுத்தார்.
பிப்ரவரி 15 : தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு தூக்கு தண்டனை, 25 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
பிப்ரவரி 17 : 50 ஆயிரம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டான். நடிகைகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் அவன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது அம்பலமானது.
மார்ச் 6 : சென்னை வடபழனியில் திரைப்பட இயக்குநர் செல்வா படுகொலை செய்யப்பட்டார். அவரது படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சங்கீதாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகப்பட்டது.
மார்ச் 16 : கணவர் முகேஷிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா வழக்கு தொடர்ந்தார்.
ஏப்ரல் மாதம் : கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேருவதற்கு வசதியாக நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று கடந்த ஏப்ரலில் தமிழக அரசு நுழைவுத்தேர்வுவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.
மே 20 : நடிகர் ஸ்ரீகாந்துக்கும்-வந்தனாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில் வந்தனா குடும்பத்தினர் பற்றி வெளிவந்த மோசடி புகார்களை தொடர்ந்து திருமணம் தடைபட்டது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகி திருமணம் நடந்தது.
மே மாதம் : கல்லூரி மாணவ-மாணவியரின் வசதிக்காக ஷிப்ட் முறையில் இயங்கும் வசதி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த மே மாதம் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஒரு ஷிப்டும், மதியம் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இன்னொரு ஷிப்டும் நடைமுறைக்கு வந்தன.
|