2007ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்ரிக்க நாடான காங்கோவில் நடந்த கோர விமான விபத்துடன் சோகமாகத் துவங்கி, பாக்.ல் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவேன் என்று கூறி வந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு டிசம்பர் 27ஆம் தேதி பலியானதில் முடிந்துள்ளது. இதைப்போன்ற எண்ணற்ற சோக சுவடுகளை தன்னகத்தே கொண்ட 2007ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பொதுவாகவே ஒரு அசைவற்ற நிலையே நிலவியது. |