அடிக்கடி சண்டை போட்டு பேசாமல் இருக்கும் ஏராளமான தம்பதிகளைப் பார்க்கிறோம். அதெல்லாம் வேண்டாம். பேசாமல் இருப்பதை விட, பேசியேக் கொன்றுவிடுவது நல்லது. அதற்கு இது ஒரு உதாரணம்.ஒரு கணவருக்கும் மனைவிக்கும் சண்டையாம் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஹாலின் நடுவில் இருக்கும் மேஜை மீது சொல்ல வேண்டியதை எழுதிவைத்து விடுவார்கள். ஒரு நாள் இரவு கணவன் வந்து ஒரு காகிதத்தில், நாளை காலை 4 மணிக்கு எழுப்பு. நான் 5 மணிக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு படுத்துவிட்டான்.மறுநாள் காலை கணவன் எழுந்து பார்க்கும் போது மணி 6. மிகவும் கோபத்துடன் மனைவியை திட்டுவதற்காக எழுந்து சமையலறை நோக்கிச் சென்றான். போகும் வழியில் இருந்த நாற்காலியில் அவன் கால் தடுக்கியது.அப்போது அவன் அந்த நாற்காலியைப் பார்த்தான். அதில், மணி 4 ஆகி விட்டது எழுந்திருங்கள் என்று எழுதியிருந்தது.என்ன எப்படி இருக்கிறது பிரச்சினை.. அதனாலத்தான் சொல்றோம்... பேசாம இருக்காதீங்க. |