முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவருக்கு அடி உதை!
ஆஸ்ட்ரேலியாவில் படித்து வரும் 21 வயது இந்திய மாணவர் மீதநிறவெறித் தாக்குதலநடத்தப்பட்டுள்ளது. இதனாலஅங்கவசித்தவருமஇந்தியர்களஆத்திரமடைந்துள்ளனர்.

டேவிட் என்று அழைக்கப்படும் இந்த மாணவர் ஆஸ்ட்ரேலியாவில் கடந்த இரண்டரை மாதங்களாக வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று ரெயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் இவரை வழிமறித்து சிகரெட் கேட்டுள்ளனர்.

அப்போது திடீரென நால்வரும் டேவி‌ட்டை அடித்து உதைத்து வன்முறையில் ஈடுபட்டனர். பிறகு அவரது பின் மண்டையில் பாட்டிலால் அடித்தனர். இதனால் டேவிட் மயக்கமடைந்ததாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.

சாலையின் மறு முனையில் சென்று கொண்டிருந்த மக்களிடம் உதவி கோரி டேவிட் கதறியுள்ளார். ஆனால் ஒருவரும் மனமிரங்கவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டேவி‌ட்டிற்கு மண்டையில் தையல் போடப்பட்டுள்ளது. முக வீக்கம் ஏற்பட்டு மூக்கிலும் பயங்கரக் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்திய மாணவரும் பகுதி நேர கார் ஓட்டுனருமான ஜல்விந்தர் சிங் தாக்கப்பட்டதைததொடர்ந்ததற்போதஇன்னொரஇந்திமாணவருமதாக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் தொடர்ந்து இதுபோன்று இந்தியர்கள் நிறவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
இ‌ந்‌திய மாணவ‌ர் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!
மெல்போர்னில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!
பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!
அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு நெருக்கடி : மக்களவையில் கேள்வி!
இ‌ந்‌திய‌ இசை‌க் கலைஞ‌ர்க‌ள், பூசா‌ரிக‌ளி‌ன் ‌விசா‌க்களை புது‌ப்‌பி‌க்க மலே‌சியா முடிவு!
இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உதவ கா‌ல் செ‌ன்ட‌ர், இணைய தள‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் ‌தி‌ட்ட‌ம்!