அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் மற்றும் நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அயல்நாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவை பூர்வகமாக கொண்ட அயல்நாட்டு குடியுரிமை பெற்ற பெண்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள்: · அயல்நாடுவாழ் இந்திய கணவன்மார்களால் பாதிக்கப்பட்டவர்களும், விவாகரத்து பெறும் பெண்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். · இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். திருமணம் இந்தியாவில் நடந்திருக்க வேண்டும். · திருமணம் நடந்தபிறகு அயல்நாடு சென்று 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். · திருமணம் நடந்த 5 ஆண்டுகளுக்குள் கணவன்மார்களால் விவாகரத்து தரப்படும் பெண்களாக இருக்கலாம். · விவாகரத்து பெற்ற 10 ஆண்டுகளுக்குள் கணவனால் உதவித்தொகை மறுக்கப்படும் பெண்களாக இருக்கலாம். · நிதியுதவி கோரி விண்ணப்பத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். வழக்குக்கு அதிகபட்சம் ஆயிரம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படும். அதுவும் அரசுசாரா அமைப்புகளின் மூலமாக வழங்கப்படும்.
|