காலையில் ருசியான சிற்றுண்டி, மதியம் வயிராற நல்ல சாப்பாடு, இரவில் ரசத்துடன் முடிக்கும் அளவான உணவு என்று நாளுக்கு மூன்று வேளை உட்கொண்டாலும், அது பசிக்கும், உடலிற்கும்தான். ஆனால் நாள் முழுவதும் நாம் பணியாற்ற, வரும் பணி அனைத்தையும் தொய்வடையாமல் செய்து முடிக்க கட்டாயம் ஒன்று தேவைப்படுகிறது. நம் உள்ளத்திற்கு உற்சாகம் அளிக்கவும், மூளைக்கும் உத்வேகமளிக்கவும்... ஏதாவது பானங்கள். “என்னதான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாலும்... கடைசியில ஒரு கப்... குடிச்சாதாம்பா எனக்கு சாப்பிட்டா மாதிரி இருக்கும்” என்று பலர் கூறக் கேட்டுள்ளோம். |