சிறிது காலத்திற்கு பின் மகாத்மா காந்தியை ஆளும் பிரிட்டிஷ் அரசு நிபந்தனையின்றி விடுவித்தது. திரு ஜின்னா பஞ்சாபில் தோல்வியுற்றார். காங்கிரஸ் இல்லம், ஜின்னா ஹால் இரண்டும் தோற்கவோ, விடுவிக்கப்படவோ இல்லை. இந்த பிரம்மாண்டமான கட்டிடங்களின் சற்று தொலைவில் இருந்த அந்த மூத்திரக் குழி தன் துர் நாற்றம் வீசும் பணியை தொடர்ந்து செய்தது. வெளியே இருந்த குப்பைக் குவியல் மேலும் அதிக உயரத்தை எட்டியிருந்தது.
அவன் மூன்றாவது முறை அந்த மூத்திரக் குழிக்குச் சென்றான். இயற்கையின் அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக இல்லை.
அவன் மூக்கை மூடியபடி, மூச்சை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். தரையெங்கும் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. சுவரில் அதற்கு மேலும் மனித பிறப்புறுப்புகள் வரைவதற்கு இடம் இல்லை.
'பாகிஸ்தானை-முஸ்லிம்களின் - உங்களுக்குத் தெரியும் எதுவென்று-அதில் திணியுங்கள்' மற்றும் 'அகண்ட பாரதத்தை இந்துக்களின் - உங்களுக்கு தெரியும் எதுவென்று- அதில் திணியுங்கள்' என்ற வார்த்தைகள் இப்பொழுது சிறிது மங்கலாயிருந்தன.
அவன் வெளியேறிய பின் அந்த இரண்டு வாக்குமூலங்களின் கீழே ஒரு புதிய வரி தோன்றியிருந்தது : "அன்னை இந்தியாவை, இந்துக்கள் முஸ்லிம்களின் - உங்களுக்குத் தெரியும் எதுவென்று- அதில் திணியுங்கள்'.
ஒரு கணம், இந்த வார்த்தைகள் காற்றில் நடனமிடும் ஒரு மெல்லிய மணம் போல, அந்த மூத்திரக் குழியின் நாற்றத்தை அகற்றியது போல் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணத்திற்கு மட்டும்.
நன்றி: சதத் ஹஸன் மாண்ட்டோ சிறுகதைகள்
தொகுப்பு: ரவி இளங்கோவன்
வெளியீடு: ஸ்நேகா, ராயப்பேட்டை - சென்னை.
|