முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தெரசா என்று கத்திய மனிதன்!
இடாலோ கால்வினோ
இடாலோ கா‌ல்‌வினோ
webdunia photoFILE
நான் நடைபாதையை விட்டிறங்கி, பின் பக்கமாக நடந்து சில தப்படிகள் முன்னோக்கி, தெருவின் மையத்தில் இருந்து, என் கைகளை ஒரு மெகாஃபோன் மாதிரி குவித்து, அங்கிருந்த கட்டிடத்தின் மேல் மாடிகளை நோக்கி உரக்கக் கத்தினேன் : 'தெரசா!'

நிலவைப் பார்த்து பயமுற்ற என் நிழல் என் இரண்டு கால்களுக்கிடையில் பயந்து ஒடுங்கிக் கொண்டது.

யாரோ ஒருவர் இந்தப் பக்கமாக நடந்து வந்தார். மீண்டும் நான் உரக்கக் கத்தினேன்: 'தெரசா!' அந்த மனிதன் என்னருகில் வந்து இவ்வாறு கூறினான்: நீங்கள் இன்னும் உரக்கக் கத்தவில்லை என்றால் அவளுக்கு உங்கள் குரல் கேட்காது. நாம் இருவரும் சேர்ந்து முயல்வோம். ஆக மூன்று வரை எண்ணி விட்டு நாம் இருவரும் சேர்ந்து கத்துவோம். 'ஒன்று இரண்டு மூன்று'. நாங்கள் இருவரும் கூவினோம்: 'தெ--ரெ--சா'

சினிமாக் கொட்டகைகளிலிருந்தோ காப்பி விடுதியிலிருந்தோ திரும்பிக் கொண்டிருந்த நண்பர்களின் சிறு குழு ஒன்று நாங்கள் கத்துவதை கவனித்தது. அவர்கள் சொன்னார்கள் : 'சரி நாங்கள் கூட உங்களுக்காக ஒரு முறை சப்தம் கொடுப்போம்'. அவர்கள் தெருவின் நடுவில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். முதல் மனிதன் ஒன்று இரண்டு மூன்று என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து கத்தினோம் : 'தெ--ரெ--சா'.

வேறு யாரோ அந்தப் பக்கம் வந்தவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். கால்மணி நேரத்திற்கு பிறகு நாங்கள் ஒரு கூட்டமாக ஏறத்தாழ இருபது பேர்கள் இருந்தோம். அவ்வப்போது யாராவது புதிதாக அந்தப் பக்கமாக வந்தார்கள்.

ஒரே சமயத்தில் ஒரு நல்ல சத்தம் கொடுப்பதற்கு ஒருங்கிணைத்துக் கொள்வது எளிமையாக இருக்கவில்லை. எப்பொழுதுமே யாராவது ஒருவர் மூன்று எண்ணுவதற்கு முன்பே தொடங்கி அல்லது அதற்கு பிறகு நீண்த நேரம் கத்தி விடுகிறார். ஆனால் இறுதியில் ஓரளவு திறமையான ஒன்றை நாங்கள் செய்து கொண்டிருந்தோம்.'தெ' என்பது நீச்சமாகவும், நீளமாகவும், 'சா' என்பது அமுங்கியும் குறுகியும், இருக்கவேண்டும் என்ற ஒப்புதலுக்கு வந்தோம். அது சிறப்பாகத் தோன்றியது. அப்போதைக்கப்போது யாரோ ஒருவர் வெளியேறும்போது கூச்சலும் குழப்பமுமான சச்சரவு உண்டாயிற்று.

எங்களுக்கு அது சரியாக வந்து கொண்டிருக்கும்போது, அந்தக் குரலை வைத்துச் சொல்வதாயிருந்தால், புள்ளிகள் கொண்ட முகத்தை உடையவர் என்று குஉறமுதியும் ஒருவர் கேட்டார்: 'ஆனால் உறுதியாக அவள் வீத்தில் இருக்கிறாளா என்பது தெரியுமா?'

'இல்லை'- நான் சொன்னேன்.

'இது சுத்த மோசம்', மற்றொருவர் சொன்னார். உங்கள் சாவியை மறந்து விட்டீர்களா? அப்படியா?
1 | 2  >>  
மேலும்
பொ‌ங்கலு‌ம் ஒடை‌ஞ்ச பானையு‌ம்... (சிறுகதை)
புளியம் பூ
என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒரு மனிதர்!
கடிகார மனிதர்கள்
சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்
நவீன சினிமாவிற்கான களம்