முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
அராபிய இலக்கியங்களில் இந்தியா
Webdunia
பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து

வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது

நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம்

கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப்

பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.

பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.

சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத்தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.

இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின்

துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.

இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.

இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.
1| 2| 3
ஆதாரம் - - எம்.எஸ்.அஷ்ரஃப்
மேலும்
மெக்பெத்தின் தனிமை -அகிரா குரசேவா
சிலப்பதிகாரம் எனும் ஒரே தமிழ் நாடகம் - இந்திரா பார்த்தசாரதி
பூமணியின் `பிறகு' - நாவலை முன்வைத்து. . . - ஆர். முத்துக்குமார்
நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம் -உம்பர்த்தோ ஈகோ
ரிக்வேதரிஷி - வெங்கட் சாமிநாதன்
அமெரிக்காவில் ஆல்பெர் காம்யு - ஸெர்ஜ் தூப்ரோஸ்கி