முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இலக்கியம் > கவிதைகள் > கடவுளைத் தேடி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடவுளைத் தேடி
webdunia photoWD
விவேகான‌ந்த‌ரி‌ன் ‌பிற‌ந்த ‌தின‌மஇ‌ன்று. ‌விவேகான‌ந்த‌ரி‌ன் ‌பிற‌ந்த ‌தின‌மதே‌சிஇளைஞ‌ர்‌ ‌தினமாக‌ககொ‌ண்டாட‌ப்ப‌ட்டவரு‌கிறது. இதையொ‌ட்டி ‌விவேகான‌ந்த‌ரி‌னகடவுளை‌ததேடி எ‌ன்க‌விதஉ‌ங்களு‌க்காக...

1. கடவுளைத் தேடி

மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே,
கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே,
கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்திமிகு மறைகளிலே,
சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலே

ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்
இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப்போல்
யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன்!
பேரன்பே! என் இறைவா! பிறிதெங்கு சென்றாய் நீ?

எழுந்துவந்த எதிரொலியோ இயம்பியது சென்றதென,
இரவினிலும் பகலினிலும் எத்தனையேஆண்டுகளாய்
அரியவொரு சுடர் என்றன் அறிவில் நிலவியது!
எப்பொழுது பகல்மாறி இரவுற்றதென அறியேன்,

செப்பமுள் நூலறுந்து சிதைந்ததுபோல் இருந்ததுளம்;
பொங்குமொளி வெய்யிலிலும் பொழியும் மழைதனிலும்
கங்கைக் கரையதனில் கால்நீட்டி நான்படுத்தேன்;
எரிகின்ற கண்ணீரால் எழுந்த துகள் நான் அடக்கி

அழுதோலம் இட்டேன்யான் ஆர்ப்பரிக்கும் கங்கையுடன்
இருக்கும் நிலம் யாவும் எச்சமயக் கோட்பாடும்
உரைக்கும் பெயர்களினால் உனைக்கூவி நான் அழைத்தேன்,
உயர்ந்தவர்கள் குறிக்கோளை உற்ற வழியதனைத்

தயவோடு நீ எனக்குச் சற்றே தெரியவுரை!
என்றன் அலறலுக்கும் ஏங்கொலிக்கும் மத்தியிலே
நின்றொருவன் எனைக்கூவும் நிலைதெரியும் நாள்வரையில்
கணங்கள் யுகங்களெனக் காட்சிதர, துன்பத்தின்

உணர்வு பெரிதலற ஓடியன பல்லாண்டு.
`என் மகனே, என் மகனே' என்று மிக மேலான
மென்மைக் குரல் எழுந்து வேதனையை ஆற்றியது,
என்றனுயிர் நரம்பெல்லாம் இணைந்திசைக்கும் இசையதனில்
நன்றுவரும் சிலிர்ப்பாக நற்காட்சி தந்தது!
எந்த இடத்திருந்து எழுந்ததந்தக் குரல் என்று
கண்டு கொளமுயன்று கால்ஊன்றி நான் நின்றேன்.
எனைச்சுற்றி, என் முன்னே, என் பின்னே அதைக்காண

முனைப்போடு நான்நோக்கி முயன்றுமிகத் தேடி நின்றேன்.
மறுபடியும் மறுபடியும் மாண்புடய குரலதுவோ
உரையாடி நின்றதுபோல் உளத்தினிலே தோன்றியது.
ஆனந்த வெள்ளத்தில் ஆன்மா அமைதியுற்று

மோனப் பரவசத்தில் முற்றும் மயங்கியது.
மின்னலொன்று, ஆன்மாவில் மிக்கஒளி சேர்த்தது காண்.
என்னிதய உள்ளுக்குள் எழிற்கதவம் திறந்ததுகாண்.
இன்பமே! பெருமகிழ்வே! எதனை நான் காண்கின்றேன்!

1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஈழத் தமிழருக்கு கருணாநிதி கவிதை!
'அரிச்ச‌ந்திரனின் செல்பேசி'
எரிவையர் குறித்து
வறுமையின் நிறம்...
பசுமைப் புரட்சி!
சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று: கருணாநிதி கவிதை!