முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இலக்கியம் > கவிதைகள் > எரிவையர் குறித்து
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எரிவையர் குறித்து
நோயல் ஜோசப் இருதயராஜ்
நூற்பா யாப்பில் நுண்பகுப்பு விமர்சனம்

நோயல் ஜோசப் இருதயராஜ்

webdunia photoWD
[பெண் கவிஞர்களில் இன்று சிறு பத்திரிக்கை தளத்தில் உரத்த குரலில் பெ‌ண்களின் உடல் மொழியை எழுவதற்கான தேவையை வலியுறுத்தி வருபவர் குட்டி ரேவதி, அவரது சமீபத்திய கவிதைத் தொகுதிகளில் இந்தக் குரல் உரத்து ஒலித்து வருகிறது. மண்டைக்குள்ளே பற்றிய அந்தப் பொறியை பரபரவென்று எரித்துப்பரப்புவோம் என்று ஒரு வரியை இவர் எழுதப்போக, நோயல் இருதயராஜ் தனது தகர்ப்பு விமர்சன தேவதையை இந்த வரிகளின் பக்கம் திருப்பி, அகழ்ந்தாய்ந்து சென்று தீ பற்றிய தத்துவ, விஞ்ஞான, இலக்கிய, மரபு உட்பொருள்களை தனது சொற்றொடரியல், பொருளியல் கூறுகளுடன் உட்கலந்து நுண் தகர்ப்பு செய்து எள்ளுகிறார், கூடவே சுய எள்ளலும் நட்புடன் தொடர்கிறது. லிரிக் வடிவத்தில், மரபையும் விட்டுவிடாமல் அதற்காக மரபுவழியில் மட்டுமே பண்டிதத்தனமாக ஒழுகாமல் மரபை அனுசரித்தும், எதிர்த்தும், எள்ளியும் ஒரு புதுவகை விமர்சனக் கவிதை மாதிரியை நமக்கு அளித்துள்ளார் நோயல்.]

I

"மண்டைக்குள்ளே பற்றிய பொறியைப்
பரபர வென்று எரித்துப் பரப்புவோம்"

கேளீர்! கேளீர்! வீரவசனங்கள்!
வாரீர்!வாரீர்! வடவையை எழுப்புவீர்!

உலகம் எங்கிலும் உள்ள பெண்களே!
(பதினாறு எட்டும் மதாங்கினியர் தொட்டு
அறுபது தாண்டிய மந்தாகினியர் உட்பட
நுண்மான் நுழை'புழை சமத்துவம் உண்டு)
ஒன்று சேருங்கள் புணர்ச்சிப் புரட்சிக்கு!

'புலிங்கம்' எனப்படும் தீப்பொறி மூட்டி
'உற்கம் எனப்படும் தீத்திரள் தூண்டிக்
கொழுந்து விட்டெரியும் சுவாலைக்ள் செறித்துச்
சிகாவர்க்கங்கள் ஆக்கி எழுநா உயர்த்தித்
தீவகை எல்லாம் ஏகமாய்த் திரட்டி

ஊர், நகர், நாடு, தேசம், கண்டம்
அர்த்த கோள எல்லைகள் கடந்து
உலகையே அழிக்க ஊழியின் முடிவில்
பெண்பரி வடிவில் பெருங்கடலினின்றும்
எழும்பும் வடவையாய் எழும்ப வாரீர்!

ஒடுக்கப்பட்ட உடலின் விடுதலை
படுக்கை அறையில்தான் பலிக்கும் என்று
கூவி அழைக்கிறார் குட்டி ரேவதி!
தீமிக்க தீயோர் தேவியைச் சேருவீர்!
தாய்க்குலம் இனிமேல் தீக்குலம் ஆகட்டும்!
அரிவையும் தெரிவையும் எரிவை ஆகட்டும்!

II


முலைகள், யோனி, புலன் உணர் பொறிகளே
படைத்த மதன் முன் தானைத் தலைவியே!
மண்டை என்ற பகுதியும் உமக்கோ?
(இடை நிலை, விகுதியின் விசேடங்கள் அறிவேன்)
மண்டையோ மண்டை உள்ளீடோ அற்றது
முண்டம், கவந்தம், மட்டை, யூபம்,
செக்கு, புனல், ஊன் தடி, உடல் குறை எனப்
பிங்கல திவாகர, சூடாமணி நிகண்டுகள்
சங்கை இன்றிச் சாற்றி உள்ளன!
எண்சாண் உடம்புடை மனிதர்க்கே அன்றி
நுண்ணுயிர் எதற்கும் இன்றியமையாதது
சிரசே என்பதும் ஜீவராசிகளிலே
'சிரமிலி' யாவது நண்டே என்பதும்
"திறவோர் காட்சியில் தெளிந்தனம்" ஆகவே
நண்டைத் தவிர பெண்டகை உமக்கும்
சிரம் துணியுண்டதாய்த் துணிபு கொள்கிறேன்.

III


பின் நவீனத்துவ சம்சய வாதத்தின்
சிகரமாகிய சுய ஐயுறவில்
இன்னும் எனக்கு நம்பிக்கை இருப்பதால்
தலைக்குறை தங்களுக் கென்னும் என் துணிபைத்
தலைகீழாக்கி தமியெனுக்கே
தலைக்குறை உளதெனத் தர்க்கத் திற்காக
ஒத்துக் கொள்கிறேன், ஒரு கால் உமக்கும்
மண்டை இருக்கலாம், ஆனால் அதனுள்
மண்டுவதென்ன? விசால மனத்துடன்
எத்துணை விட்டுக் கொடுத்து நான் எண்ணினும்
கடபுட சடமே பதம் சிதம் சதமென
மயங்கும் உமக்கு மண்டையி நுள்ளே
பொறி பறந்திடுதல் அரிதினும் அரிதே!
1 | 2  >>  
மேலும்
வறுமையின் நிறம்...
பசுமைப் புரட்சி!
சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று: கருணாநிதி கவிதை!
தகுமோ தயக்கம்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்! - கருணாநிதி கவிதை