சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள் தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்! பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப் பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்! ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில் ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.
அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ? கொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள் கொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள். பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச் சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை! சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!
|