முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாயமாய் நீளும் பாதை
-விக்ரமாதித்யன்
ந‌‌வீன ‌விரு‌ட்ச‌மஎ‌ன்ற ‌சி‌ற்‌றித‌ழி‌லவெ‌ளியான ‌வி‌க்ரமா‌தி‌த்ய‌னி‌னக‌விதை‌யத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌மவாசக‌ர்களு‌க்காஇ‌ங்கவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளோ‌ம்.

கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்

அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்

கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்

எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்

எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன

ஏதோ ஓர்
அழிவுப் பாதை

நீண்ட
நெடும்பாதை

நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை

எப்பொழுது
வந்து சேரும் அத்தம்

இப்பொழுது
இருப்பது எந்த இடம்.

(நன்றி: நவீன விருட்சம், அக்- டிச. 2000)
மேலும்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!
இருப்பு
தீபாராதனை
மரபின் எச்சம்
தற்கொலைக்குத் தயாரானவன்
பிளவுற்றல்