முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தற்கொலைக்குத் தயாரானவன்
அழுக்கின் சுயம

ஒவ்வொரு மூலையிலும்
வீடு இறைந்து கிடக்கிறது
துணிக்குவியலாய்.

ஒவ்வொரு துணியிலும்
அவரவருக்கான
பிரத்யேக வாசனை
ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எடுக்க எடுக்க
மலைக்காமல் வளர்கிறது
துணிகளின் மலை

மடித்து
மடித்து
களைத்துப் போய்
ஒவ்வொரு குவியலிலும்
அழுக்காய்ப் படர்த்துகிறேன்
என் சோம்பலின்
சுய ரூபத்தை

மணங்களின் கலவையினூடே
முகரவியலா நறுமணத்துடன்
உயர்ந்து வளர்கிறது
என் சுயத்தின்
விஸ்வரூபம்
<< 1 | 2 
மேலும்
பிளவுற்றல்
நற்குணம்
தஸ்லீமா ந‌ஸ்‌ரீன் கவிதைகள்
நியதி
மனக்கவிதை
காதலியாய் இரு