ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
செந்தேனினும் நல்மணம் வீசும் மலரின் மொட்டே! - என் மனம் நிறைந்தவளே
சரியோ யான் அழைத்தல் மனம் நிறைந்தவளே நீயெமக்கு
உன் உறவினன் நானல்ல - வேறு உரிமையினனுமல்ல அன்பு என்னில் உந்தித்தள்ள உன்னில் பிரியம் வைத்தேன்
வளர்த்த அன்பினால் - இன்பம் வளர்த்தேன் என்னுள் வளர்ந்த அன்பினால் - துன்பம் வருந்திட துடித்தேன்
ஆழ நேசித்தலும் அன்பினில் நிறைத்தலும் - பின் வலித்தாக்கியான் வெந்து நோதலும் பாழான என் வாழ்வினில் பழக்கமாகிப் போனதே
|