முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அப்ப அப்ப தீப்பிழம்பாய்
-காகிதன்
அப்ப அப்ப தீப்பிழம்பாய்
கொழுந்துவிட்டு எரியுதடா
கொஞ்சநேரம் அணையட்டுமே
கொழந்தபுள்ள சிரிக்கட்டுமே

எத்தனையோ நாட்டுக்குள்ள
எரிமலைகள் வெடிக்குதடா
ஏதுமில்லா ஊருக்குள்ள
குடுச மட்டும் எரியதடா

சோறு தண்ணி இல்ல இங்க
வயித்துபசி மட்டும் இங்க
ஆறு கொளம் நெறஞ்சா கூட
அர வயித்து கஞ்சிதான் இங்க

வானம் கூட சில நேரம்
வருத்தப்பட்டு அழுதாலும்
வயிறு எரிச்ச அடங்கலயே
வயித்துபசி தீரலயே

பத்தவைக்க அடுப்புமில்ல
பொங்கிதிங்க அரிசியில்ல
செத்துபோன ஒடம்பு மட்டும்
குடுசயோடு எரியுதடா

சுடுகாடு போனாகூட
எரிக்க காசு கேக்குறான்னு
ஏதுமில்லா ஏழ இங்க
எரியுராண்டா குடுசயோட...

-காகிதன்
மேலும்
மனக்குன்றின் மேல்...
இட‌ம் ‌பிடியு‌ங்க‌ள்
முடிந்து போனது
பாரதி கேட்ட விடுதலை இதுதான்!
உறு‌‌தி வே‌ண்டு‌ம்
ஜாதீய கீதம்