காகிதன் என்ற கவிஞர் எழுதிய கவிதையில் இருந்து உங்களுக்காக ஒரு கவிதை.
மலர்ந்திடும் வாசப் பூவிலும் புலர்ந்திடும் வைகறை பொழுதிலும் வீசிடும் தென்றல் காற்றிலும் பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும்
தூவிடும் முத்துச் சாரலிலும் கூவிடும் குயிலின் குரலிலும் குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும் ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்
படர்ந்திடும் காலை பனியிலும் நடந்திடும் பசுமை புல்வெளியிலும் ஆடிடும் வண்ண மயிலிலும் ஓடிடும் பஞ்சு மேகத்திலும்
உனக்கான என் காதலின் எண்ணச் சிதறல்களை ஒவ்வொரு துளியாய் ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்... - காகிதன்
|