முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
இந்தியப் பொருளாதாரம்
-கலைவேந்தன்
Webdunia
இங்கே...
கலை மகளுக்குக்
கை விலங்கிட்டுவிட்டு
அலை மகளுக்கு
ஆரத்தி எடுக்கின்றனர்...

திருவோட்டைக் கூட
அரை விலைக்கு விற்றுவிட்டு
கையேந்துவதற்குத் தயாராய்
அரசாங்கம்....

வாய் கொள்ளும் உணவுக்காக
கரும்பு வயலையே
துவம்சம் செய்யும்
அதிகார யானைகள்...

என்றாவது விடியுமென்று
ஏற்றி வைத்த நம்பிக்கை
நம்பிக்கை விளக்குடன்
திருவாளர் பொதுஜனம்....
மேலும்
பாரத தேசத்து பாவப் பயிர்கள்...
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில்
மரத்தை மறைப்பது
மரம்போல்வர்
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!
மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழா கவிதை, கட்டுரைப் போட்டிகள்