பாதையோரத்துப் பாவங்களின் விழியோரத்தில் நீர்ப்பூக்கள்..
தேசீயக் கொடிக்கம்பம் போல் மெலிந்த தேகங்கள் வாழ்விலும் தேக்கங்கள்...
வாழ்க்கையில் சாவைப் பார்த்துவிட்டு சாவிலே இன்பம் காணத் துடிப்பவர்கள்...
இவர்களுக்கு வசந்தம் வருவதேயில்லை சிலர் அதை ஆயுள் குத்தகை எடுத்ததால்..
மாதம் ஒருமுறை வானத்தில் தோசை தரிசனம்.. பிற நாட்களில் மௌன அமாவாசை...
தூக்கத்தில் கூட துக்கக கனவுகள்..
இவர்களுக்கு விழிப்புணவு வராமல் பார்த்துக் கொள்ளும் இன்றைய சினிமாக்கள்... கதைகளில் வாலிபத்தைக் காட்டி நிஜங்களை கிழமாக்குபவர்கள்...
உழைத்துச் சலித்த இந்த ஊமையர்களை குருடராக்கவும் செய்யும் ரசவாத வித்தைகள்...
இனி ஒரு விதி செய்வோம் அதை விளக்கமாய் வீதியில் வைப்போம்!
|