மரத்தைப்பார். கண்ணாடியைக் கழற்று, பீழையைத் தூசியை அகற்று, மரத்தைப் பார். மரத்தை மனமாகவோ மனத்தை மரமாகவோ அல்ல, மரத்தை மரமாகவே. விஞ்ஞானி வியாபாரியாக அல்ல, மரத்தை மரமாகவே மரத்தை மரம் பார்த்தாற்போல், மரத்தை மரத்துப் பார். கோவில், காவல் மரங்களாக அல்ல.
`சொல்லாமல் செய்யும் பெரியார் பலா, சொல்லிச் செய்யும் சிறியர் மா, சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி` - அந்த ஒளவையார் மரத்தைப் பார்க்கவில்லை.
பழுமரம் வள்ளலாம நெடுமரம் முட்டாளாம். தனிமரம் துறவியாம். கூட்டுமரம் வம்சமாம். தேக்கு, சந்தனம், மூங்கில் வல்லவன், தியாகி, சந்தர்ப்பவாதியாம். மரத்தில் மானுடத்தின் இலக்கியத்தைப் பார்ப்பது பார்ப்பதே அல்ல மரமை, மரத்துவம் பா - மரத்தில் இல்லை, பாமரத்தோடு பார்ப்பதில்தான். மறதி அறிமடமை காட்சி மரம்.
|