நோபல் பரிசு வென்ற உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி பள்ளி விரிவுரையாளர் லின்டா பில்மேஸ் ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியிட்ட "3 டிரில்லியன் டாலர் போர்" (1 பில்லியன் = 100 கோடி; 1 டிரில்லியன் = 1000 பில்லியன்) என்ற புத்தகத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம் என்று கூறியுள்ளனர்.
போர்கள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது இரண்டாம் உலகப் போரின் பிரதான கருத்தாக இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு அது வெறும் கற்பனை என்று உணரப்பட்டது. தற்போதைய பொருளாதார அறிஞர்கள் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு போர் ஒரு பெரும் காரணமே என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
எந்த நோக்கத்திற்காக இராக் மீது அமெரிக்கா படையெடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற ஜார்ஜ் புஷ் கூறும் நோக்கமல்ல. உலகிற்கே தெரிந்த கச்சா எண்ணெய் விவகாரத்தில்தான் இராக் படையெடுப்பின் நோக்கம் நிறவேறவில்லை என்று இந்த ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது.
போர் துவங்கும் முன் பேரல் ஒன்றுக்கு 25 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் இன்று 120 டாலர்களாக அதிகரித்துள்ளது.
இராக் போர் எதற்காக துவங்கப்பட்டது என்பது குறித்த அனைவரது கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறும் இந்த நூலின் ஆசிரியர்கள், கச்சா எண்ணெணெய்யை மலிவாக பெறவேண்டும் என்ற அந்த நோக்கம் அமெரிக்காவிற்கு படுதோல்வியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனால் எக்சாந்மொபைல் உட்பட சில எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த பணம் ஈட்டியுள்ளனர். இந்த நிறுவனங்களின் லாபமும், பங்கு விலையும் அதிகரித்ததுதான் மிச்சம் என்று இந்த நூல் கூறுகிறது.
உலக உணவுப் பற்றாக்குறைக்கும், உணவு பொருட்கள் விலையேற்றத்திற்கும் இந்திய மக்களின் உணவுப் பழக்கமே காரணம் என்று ஜார்ஜ் புஷ் மடத்தனமான ஒரு கருத்தை...
|