ஆசிரியர்: சுதீர் செந்தில் நிர்வாக ஆசிரியர்: சிபிச் செல்வன் ஆசிரியர் குழு: யூமா வாசுகி கரிகாலன் இந்திரா சுப்ரமணிய பாரதி நரேந்திரன்
(திருச்சியிலிருந்து வெளிவரும் சிற்றிதழ் உயிர் எழுத்து. சீரிய மொழிபெயர்ப்புகள், சிந்தனைத் தரம் மிக்க கட்டுரைகள், சிறுகதை மற்றும் கவிதைகளுடன் இந்த இதழ் வெளி வருகிறது விலை ரூ.20. இந்த சிற்றிதழிலிருந்து நந்திகிராம் பற்றி ஆசிரியர் சுதீர் செந்தில் எழுதிய தலையங்கத்தை வெப் உலகம் வாசகர்களுக்கு தருகிறோம்)
கடுமையான புயலினால் ஏற்படும் பெரும் வெள்ளம், கடல் சீற்றம், நில நடுக்கம், ஆகியவற்றினால் மக்களின் வாழ் நிலை தற்காலிகமாக பாதிக்கப்படுவதும் அதற்காக நிவாரண நடவடிக்கைகள் நடைபெறுவதும் உண்டு. போர்க்காலங்களில் போர் நடைபெறும் இடத்திலிருந்து மக்கள் அகதிகளாக பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் புகுவதும் உண்டு.
ஆனால் சொந்த மண்ணில் பாரம்பரியமாக நிலத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு இருப்பிடங்களிலிருந்து வெளியேற, அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இது நடந்து கொண்டிருப்பது வேறு எங்கோ அல்ல. இடதுசாரிகள் ஆண்டு கொண்டிருக்கும் மேற்குவங்கத்தில்தான்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய நந்திகிராம் மக்கள் மீது கடந்த மார்ச் 14ல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் நந்திகிராமில் அகதிகளாக மறு வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நந்திகிராமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய கல்கத்தா உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீட்டுத் தொகை வழங்கவும், இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் அளிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது.
மேற்குவங்க ஆளுனர் கோபால கிருஷ்ண காந்தி, இடதுசாரி அரசை கடுமையாக சாடியுள்ளார். நந்திகிராமில் நடந்த கடும் வன்முறை தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பிற்கு மெற்கு வங்க அரசு முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
|