முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மேடம் பொவேரி - குஸ்தாவ் ஃபிளாபே (1821-1880)
-ஆர். முத்துக்குமார்.
பக்கத்துகிராம வியாபாரி லியுரேயிடம் மேலும் அதிகமாக கடன் வாங்கத்துவங்குகிறாள். தன் கணவனின் கணக்கு வழக்குகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவனை வற்புறுத்துகிறாள்.

நோயாளிகள் செலுத்தும் பணத்திலும் தன் தலையீட்டை நுழைக்கிறாள். கணவனுக்குத் தெரியாமலேயே சொத்தைக்கூட விற்குத் துணிந்துவிடுகிறாள். இறுதியில் லியானுடனான அவள் உறவு ஒரு முடிவுக்கு வருகிறது. அவன் தன்முன்னேற்றத்தை பாதிக்கும் உறவாக இதை நினைக்க, பொவேரியோ, திருமணம் போலவே தகாத உறவுகளும் அற்பமானதாகவே உணர்கிறாள். ஒரு நாள் லியானுடன் சண்டையிட்டு வந்து வீடு வரும்போது அவள் கடன் 320 பவுண்டு உடனடியாக திருப்ப வேண்டுமென கோர்ட்டு தீர்ப்பு வருகிறது.

தற்போது அரைப்பைத்தியமான மனநிலையில், எம்மா பொவேரி ஒவ்வொரு வட்டிக்கடைக்காரரையும் அணுகுகிறாள். லியானை அணுகி அவனிடம் ஒப்படைக்கப்பட்ட உடைமையை கையாடல் செய்ய தூண்டுகிறாள். ரூடால்பிடம் கெஞ்சுகிறாள். அவன் அவளை கண்டு கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிடுகிறான். ஒரு வக்கீலை அணுகி உதவி கேட்கிறாள். ஆனால் அவனோ அவளின் இந்த நிலைமையை தனக்குத் சாதகமாக உபயோகித்துக் கொள்ளப்பார்க்கிறான்.

இறுதியில் ஹோமெயின் மருந்துக்கடைக்குள் நுழைந்து அவனின் சிப்பந்தியிடம் சாவியைக் கொடுக்குமாறு நிர்பந்திக்கிறாள். கையளவு நஞ்சினை எடுத்து விழுங்கிவிட்டு, மரணத்தை எதிர்பார்த்து வீட்டிற்கு வருகிறாள். அவளின் வலி அதிகமாகிறது. மருத்துவர் வருவதற்கு அதிக நேரம் பிடிக்க, எம்மா பொவேரி என்ற கற்பனைக்கதைகளால் பீடிக்கப்பட்ட பெண் மரணத்திற்கு பலியாகிறாள்.

இறுதிச் சடங்கிற்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சார்லஸ், சிறிது சிறிதாக இறந்த மனைவியின் மீறுதல்களையும் நேர்மையின்மையும் தெரிந்து கொள்கிறான். ரூடால்ப் மற்றும் லியானிடமிருந்து தன்மனைவி எழுதிய காதல் கடிதங்களைப் பெற்று, தன் மனைவி தன்னை நேசிக்கவில்லை என்ற காலங்கடந்த உண்மையை தெரிந்து கொள்கிறான். அவனும் மரணம் அடைகிறான்.

அவர்களின் பெண் குழந்தை பாட்டியால் வளர்க்கப்படுகிறது. அதே வருடம் பாட்டியும் இறக்கவே, மகள் ஒரு ஏழை அத்தையிடம் வளர்கிறாள். அத்தை அவளை ஒரு தொழிற்சாலையில் வேலையில் சேர்த்து விடுகிறாள்.

வீரதீர காவியக் கதைகளைப் படிக்கும் ஒருவனின் வாழ்வை நக்கல், நையாண்டியுடன் சித்தரித்த டான்குவிசாட் போலவே, பிளாபெ ரொமாண்டிக் - மிகையுணர்ச்சிக் கதைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை சோகமான எதார்த்த நடையில் சித்தரிக்கிறார். வாழ்விற்கும் கற்பனைக்கும் இடையிலான இடைவெளியை உணராத மரமண்டைப் பெண்ணின் சுய-அழிவைக் காட்டுவதற்காகவே இதை எழுதியிருக்கிறார் கஸ்தேவ் பிளாபெர். இவரது இந்தச் சித்திரம் பிரெஞ்சு மொழியில் `பொவெரிசம்' என்ற புதிய வார்த்தையையே புழக்கத்திற்கு கொண்டு வந்தது.

ஆசிரியருக்கு பெண்களின் கால்கள், பெண்களின் காலணிகள் மேல் ஒரு பதிலி மோகமும் (Fetish) பீடிப்பு மனோநிலையும் உள்ளது. மரியோ வார்கஸ் - லோசா `நிரந்தர சிற்றின்ப களியாட்டம்' என்ற தன் புத்தகத்தில் பிளாபேயின் `மேடம் பொவேரி' என்ற நாவலில் வரும் கால், காலணிகள் மேல் ஆசிரியருக்கு இருக்கும் பாலியல் பற்றுதல்களை விவரிக்கிறார்.

`மேடம் பொவேரி' பற்றி மரியா வார்கஸ் லோசா கூறுகிறார் : "பின்னால் வரவிருக்கும் நூற்றாண்டின் தொழில் சமூகங்களால் ஆண், பெண் இருவரின் அந்நியமாதலின் முதல் கூறுகளை இநாவல் கூறுகிறது. தனிமனித வாழ்வில் நவீன வாழ்க்கை நிரந்தரமாக்கிய `சூனியத்தன்மை' மனக்கிளர்ச்சியின் வடிகாலாக நுகர்வுக்கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்க பணிக்கிறது. ஆசைக்கும் அதன் பூர்த்திக்கும் இடையேயான இடைவெளியை நாடகமாக்குகிறாள் எம்மா பொவேரி".

எல்லா விஷயங்களிலும் உள்ளார்ந்து பொதிந்திருக்கும் `இன்மை'யை நாமும் கற்பனைக்கதைகள், பாலுறவு, என நுழைந்து பூர்த்தி செய்ய விரும்புகிறோம். அதனாலேயே எம்மா பொவேரியுடன் நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பெண்ணியவாதிகள் தங்கள் சொந்த சலிப்பிற்கு இந்நாவலை கை கொள்ள விழைகின்றனர். ஆனால் நாவலோ நவீன உலகின் `மனிதனின் நிலை' பற்றி பொதுத் தன்மையுடன் பேசுவதாகவே தோன்றுகிறது.

இறுதியாக ஒரு கேள்வி, மிகையுணர்ச்சியால் கற்பனை கதைகளில் வாழ்ந்து எதார்த்தத்தில் தோற்றதாக எள்ளும், வருந்தும் ஒரு எழுத்தாளர், தன்னைத்தானே கேள்விக்கு, கேலிக்குட்படுத்திக் கொள்கிறாரோ?
<< 1 | 2 | 3 
மேலும்
தமிழரின் பண்பாட்டை மீட்டு நிலைநிறுத்திய பதிப்பியல்!
எழுத்தாளர் ஆர்தர்.சி.கிளார்க் மரணம்!
கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை
ஃபிரான்ஸ் காஃப்கா‌வி‌ன் “விசாரணை”
பூனைகள் இல்லாத வீடு - புத்தக மதிப்பீடு
நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!