(GUSTAVE FLAUBERT) அதீதக் கற்பனைகளின் பலி! --ஆர். முத்துக்குமார்.
1950-களில் விளாதிமிர் நபகோவ் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுத்த ஒரு உரையில் "ஒரு பெண்ணை விட அதிக காலம் வாழ்ந்த ஒரு புத்தகம்" என `மேடம் பொவேரி' யைக் குறிப்பிடுகிறார். அவர் மேலும் இந்த நாவலை புகழ்ந்து பேசுகையில் - மாசாலா புனைகதைகளின் கீழ்த்தரமான விஷயங்களையும், கூடாஒழுக்கம் மற்றும் தற்கொலை போன்றவைகளை மிகவும் கவித்வமாக 19 ம் நூற்றாண்டின் வாழ்வை விவரிக்க பயன்படுத்துகிறார் பிளாபே என்கிறார்.
கதைக்களம் நார்மண்டி, காலம் 19 -ம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதி. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகனும், பிடிவாத குணமும், அயராது உழைக்கும் குணமுடையவனுமான சார்லஸ் பொவேரி என்ற கிராமப்புற 15 வயது இளைஞன் கல்விக்காக ரூயெனுக்கு வருகிறான். அவன் அவ்வளவு புத்திசாலியில்லையெனினும், அவன் அம்மாவின் தீராத கண்டிப்பால் ஒரு மருத்துவ அதிகாரியாகிறான். அதுவும் படிமுறையில் மிகவும் கீழ்நிலையில் உள்ள ஒரு மருத்துவனாகிறான்.
அவன் தாயார் அவனை ஓர் சிறிய தாலுகாவில் மருத்துவம் பார்க்க வசதி செய்து தருகிறாள், திருமணமும் செய்து வைக்கிறாள். அவன் மனைவி ஒரு விதவை, மேலும் இவனை விட வயதில் மூத்தவள், செல்வமுடையவள், ஆனாலும் பொறாமைக் குணமும், ஆதிக்க குணமும் நிரம்பியவள்.
இதனாலேயே சார்லஸ் தன்னுடைய நோயாளியான ரௌவால்ட் மற்றும் அவனின் அழகான பெண் `எம்மா' விடனும் நெருங்கிப் பழகுவதில் இன்பம் காண்கிறான். சார்லஸின் விதவை மனைவி எதிர்பாராதவிதமாக மரணமடைகிறாள். அவளின் மரணத்திற்குப் பிறகு - ஒரு சிறு காத்திருப்பிற்குப்பின் `எம்மா'வை மணக்கிறான். மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறான்.
ஆனால் எம்மா - மேடம் போவேரியான பிறகும், அதற்கு முன்னமேயும் கூட மிகையுணர்ச்சி - அசட்டுணர்ச்சி நாவல்களையும், கவிதைகளையும் படித்துபடித்து, `திருமணம் என்பது ஒரு ஆழமான உணர்ச்சிகளின் நிறைவேற்றக்களம்' என்று கதைகளில் வருவதுபோலவே வாழ்வும் என்ற கற்பனைக்குள் மிதந்து கொண்டிருக்கிறாள். தேனிலவுக்கு பிறகு அவளுக்கு மிகவும் சலிப்பு ஏற்படுகிறது. சார்லஸின் கற்பனையற்ற தட்டையான தினசரித்தனம் அவளின் திருமண வாழ்வு பற்றிய கற்பனைக்கதைகளின் கனவை சரித்துவிடுகிறது.
மார்க்லிஸ் ஆண்டர்வில்லியர்ஸ் என்ற செல்வந்தர் ஒரு விருந்துக்கு இருவரையும் அழைக்கிறார். அந்த விருந்தின் மிடுக்கு, ஆடம்பரம் இவளின் தற்போதைய சிறுநகர வாழ்க்கையின் மேல் வெறுப்படையச் செய்து, மிகவும் அமைதியற்றவளாகிறாள். அவள் பேஷன் பத்திரிகைகளை..
|