|
நீர்ப்பண்பாடு
|
|
-முனைவர் பி.ஆறுமுகம். செயின்ட் ஜோசப் கல்லூரி, தமிழ்த்துறை
|
|
|
|
புதன், 5 டிசம்பர் 2007( 11:53 IST )
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
உடல் மூன்று : ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்பவையே அவை. அவற்றுள் ஸ்தூல சரீரம் என்பது பஞ்சபூதங்களால் ஆனது.
"The Volume of the body occupies `space', the breathing and the respiratory system is due to air, the warmth in the body is due to `fire', and the body is made up of 'water', and the minerals (earth)" .1
நீராலும் நிலத்தாலும் உருப்பெறும் ஸ்தூல சரீரம், தீயால் வெப்பம் பெற்று, காற்றைச் சுவாசித்து, ஆகாயதத்து இடம் பெறுகிறது. முன்வினைகாரணமாய்ப் பிறப்பெடுத்து, சுகம், துக்கம் போன்றவற்றுள் உழன்று, ஆறுவகை மாற்றங்கள் பெறுகின்றது. The six Modifications namely: is, born, grows, changes, decays and dies" - இருப்பது, பிறப்பது, வளர்வது, மாறுவது, தேய்வது, இறப்பது என்பவையே அம்மாற்றங்கள்.
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்தும் பஞ்சபூதத் தொடர்புடையவை. மெய்க்கு அதிதேவதை காற்று; வாய்க்கு அதிதேவதை வருணனாகிய நீர், கண்ணிற்கு அதிதேவதை நெருப்பு, மூக்கிற்கு அதிதேவதை அசுவினி தேவர்கள். செவிக்கு அதிதேவதை ஆகாயம்.
நீராகிய தெய்வம், வாயாகிய ஞானேந்திரியததின் சுவையாகிய உணர்வைக் கட்டுப்படுத்தி நிற்கிறது. உடலை உருவாக்கி, அறுவகை மாற்றமாக்கி, வாயுணர்விற்குத் தலைமை ஏற்று நிற்பது நீர் என்பது தெளிவாகின்றது. 'சரயு என்பது தாய்முலை அன்னது' என்ற கம்பர் வாக்கும் இதனை வலியுறுத்தும்.
நந்த வனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தான்டி. 2
இச்சித்தர் பாடலும் நிலமும் நீரும் உடலை உருவாக்குதலை உருவகமாய்க்காட்டும்.
பஞ்சகோளங்களான அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், அநந்தமயம் என்பவற்றுள் அன்னமயம் உணவோடு தொடர்புபட்டது.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை 3
என்பார் வள்ளுவர். உண்டார்க்கு உண்பவற்றை உளவாக்கி, உண்பார்க்குத் தானும் உணவாவதும் மழை. உணவாலே உருவாகி, உணவாலே வளர்ந்து, மண்ணிற்குச் செல்வது உடல். இறந்துவிழும் உடல் யார்க்குச் சொந்தம்?
தாயும், தந்தையும், நீரும், தீயும், நிலமும், நாயும், நரியும், பேயும், கழுகும் பிறவும் உரிமை கொண்டாடுகின்றன. அவற்றில் நீர்க்கும் உரிமை உள்ளது. சிந்தனைக்குரியது.
'தாய் எனதென'.4
காவிரிக்கரைவாழ் தமிழக ஐந்து மாநிலக்காரர்களும், கர்நாடக மாநிலக்காரர்களும் அஸ்தியைக் காவிரியில் கரைப்பது இதனால்தான். துறவியர் விரும்புவது ஜலஸமாதி. திருமாலை அடைய நினைப்பவர், பாதத்தில் உருவான கங்கையில் கரைக்கப்பட விரும்புவர். முழு உடலை நீரில் இழுத்துவிடுவது, மச்ச அவதாரம் கொண்டு திருமாலால் நேரடியாய் உண்ணப்பட்டு. அத்துவைத நிலைபெற நினைப்பதனால்தான்.
பிதுர்க்கடன் ஆற்ற, பகீரதன், ஆகாயகங்கையைப் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வந்து பூலோக கங்கை ஆக்கினான். சீர்காழி வனத்து மூங்கிலில் எறும்பாகி, சூரபன்மனின் தாக்குதலுக்குத் தப்பி வாழ்ந்தான் இந்திரன். வனம் காயச் செய்தான் சூரபன்மன். இந்திரனோ விநாயகரை வேண்டக் காகவடிவம் கொண்ட விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்துவிடக் காவிரி பெருகி ஓடியது. சீர்காழி வனமூங்கில்கள் வாழ்ந்தன. சிற்றெறும்பு வடிவம் கொண்டிருந்த இந்திரனும் தப்பி வாழ்வுபெற்றான். கங்கை, பகீரதன் முன்னோர்களைக் கரையேற்றினான் காவிரியோ, மூங்கிலும் சிற்றெறும்பும் வாழும் வழி செய்தாள்.
நீரின் செயலை நின்றே கேளும்! மழைநீர் அறிவுடன் குளிர்வு தருமே! ஆற்று நீரோ சுக்ல விருத்தி! கிரந்தி சொரிதாம் பனி நீர் போக்கும்! வாதம் தருவது குளத்து நீராம்! வாயுவைப் பெருக்கல் ஏரி நீராம்! வெப்பம் தணிப்பது கிணற்று நீராம்! தாபம் தருவது நீரமை ஓடை! சீத சுரமே சுனைநீர் இயல்பே! பித்தம் போக்கல் ஊற்று வேலை! இரத்தம் பித்தம் அருவியில் நீக்கம்! தேகபாரம் அடவிநீர் தருமே! கடல்நீர் அதனால் வினையும் மாறும்!5
மாசு போகப்புனல் படிவதும் தீது நீங்கக்கடல் ஆடுவதும் பட்டினப்பாலை காட்டும் செய்தி. பன்னிருவகை நீர்க்கும் பன்னிருவகை குணங்கள். ஆற்று நீர் ஆண்மை வளர்க்கக் கடல் நீர் வினையும் நீக்கும். மலைத்தலைய கடற்காவிரி எனும் சிறப்புடைய காவிரிக்குச் சுக்லவிருத்தி தரும் பொது இயல்பு உண்டு. ஓடிவரும் காவிரி அருவியாய்ப் பொங்கி வழியும்போது இரத்த பித்தம் நீக்கும். திருவரங்கத்தையும் ஆனைக்காவையும் தீவுகளாக்கித் திருமால் மார்பில் மாலையாகி வருவதால் வினையும் நீக்கும். மதிமருட்சி கொண்ட மக்கள் காவிரிக்ரை குணசீல நீரால் அறிவுத் தெளிவைத் திரும்பப் பெறக்காண்கிறோம். மாறிய குணம் சீலம்பெறும் தலம் குண சீலம். அதனைச் செய்வது காவிரி நீர். வாழ்வு முடிந்து மோட்சம் பெறுவது கங்கையால். வாழும்போதே மனநலக்கெட்டோர் மனநலம் பெறுவதும காவிரிநீரால் என்பதைக் குணசீலத்தலம் இன்றும் மெய்பிக்கக் காண்கிறோம்.
காவிரிக் கரை ஜீயபுரம் பகுதியில் வாழும் மக்களில் பலர் செவிகேளா நிலைக்குக் காரணம் காவிரியில் குளிப்பதே என்று கூறுவது உண்டு. குடகுமலை தொடங்கிப் பூம்புகார் வரை வாழும் காவிரிக்கரை வாழ் மக்கள் அடையாத துன்பமொன்றைச் ஜீயபுரம் மக்கள் அடைவது உண்மையெனின் ஜீயபுரத்துக்காவிரியாற்று அடிமண்ணும், கரைவாழ் தாவரங்களும் ஆய்வு செய்யப்பெற வேண்டியன.
'தண்ணீருங் காவிரியே!' என்பது தனிப்பாடல். 'கங்கை நதிபுரத்துக் கோதுமைப் பண்டத்தைக் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என்பது பாரதி வாக்கு. கும்பகோணத்துக் கொளுந்து வெற்றிலையின் சிறப்பே பாரதி குறிப்பது. மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், நெல்லும், வாழையும் தஞ்சைத் தரணியில் மிகுதி. காவிரிப் பெயர்கொண்ட பொன்னி அரிசி தனிமதிப்புடையதாம். கம்பும் சோளமும்கூடச் சிறப்புடையன. பயிர்வளம் கூட்டும் காவிரிக்கரை வாழ் மக்களும் தனி அழகு பெறுவது இயல்பே! திருவரங்கத்துப் பெண்கள்' அழகும் ஆண்களின் அழகும் காவிரி நீர்தரும் அழகே!
|
|
|
|
|