அரசாங்கம் அறிவித்திருந்த சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது தான் இந்த ராமசாமி கவுண்டர் பிணங் கிடங்கு. இதன் உரிமையாளர் குணசேகரன் என்கிற 29 வய்து வேதியியில பட்டதாரி. இவனுடைய நண்பர்களில் சிலர் சோப்பு கம்பெனி, ஷாம்பு கம்பெனி எனத்தொடங்கி கையைச் சுட்டுக்கொண்ட போது இவனுக்கு மட்டும் இந்த யோசனை எப்படி வந்ததென்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.