முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > எழுச்சிக் கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தந்தையரைப் போற்ற ஒரு நாள்!  Search similar articles
ச.ர.ராஜசேக‌ர்
உலகெங்கிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒரே தினத்தில் அல்ல. இந்தியா உள்ளிட்ட 46 நாடுகளில் ஜூன் 15ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையர் தினத்தைப் போன்றே தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தந்தையர் தினம், கடந்த 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் அறிமுகம் ஆனது. ஆனால் பல்வேறு நாடுகள் இதனை தந்தையர் தினம் என்ற பெயரில் கொண்டாடாமல், 'ஆண்கள் தினம்', 'பெற்றோர் தினம்' என்று கடைபிடிக்கின்றனர்.

தந்தையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த தினத்தில், அவர்களது குழந்தைகள் தங்கள் தந்தைக்கு சிறப்புப் பரிசளித்து கவுரவிப்பது வழக்கம். இந்நாள் தந்தைகளுக்கு ஊக்கத்தையும், தமது குடும்பம், குழந்தைகளை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் பொறுப்பு தந்தைக்கும்- அன்னைக்கும் சமமானதே என்றாலும், குழந்தைக்கு அன்னையிடம் இருக்கும் பாசப்பிணைப்பின் அளவு/தாக்கம் தந்தையிடம் இருக்குமா என்பது நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

hand
webdunia photoWD
இந்தியாவைப் பொறுத்த வரை கணவன்-மனைவி பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற கூற்றும் நிலவுகிறது. இதற்கு உதாரணமாக "நூலைப் போல் சேலை... தாயைப் போல் பிள்ளை" என்பது போன்ற பல பழமொழிகளைக் கூறலாம்.

ஆனால் தற்போதைய நவீன யுகத்தில், பெண்களும் ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்க துவங்கி விட்டதால், தம்பதிகளிடையே பிரச்சனை ஏற்படும் போது, பழங்காலத்துப் பெண்கள் போல் "கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்..." என்ற எண்ணத்துடன் வீட்டிற்குள் முடங்காமல், தங்கள் சொந்தக் காலில் நின்று தத்தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்றனர்.

இது தந்தையர் தினத்தின் மகிமையை எதிர்கால சந்ததிகளிடம் குறைத்து விடும் என்று கூறப்படும் அதேவேளையில், மனைவியை இழந்து/பிரிந்து வாழ்ந்தாலும் தனது குழந்தைக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களை சமூகம் மதிக்கும் மனிதர்களாக மாற்றும் பல தந்தைகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்துக்கு தலைவனாக அல்லது தந்தையாக இருந்த சிலர், சமூகத்திற்கும் பெரியளவில் தொண்டாற்றியும் உள்ளனர். அந்த வரிசையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி,
1 | 2  >>  
மேலும்
தெய்வக் குழந்தைகள்
மின்னஞ்சலில் வந்த தகவல்!
குழந்தைகளுக்கு வாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்!
கோடையில் குழந்தைகளுக்கான உணவு
கோடையில் சிறப்பு அக்கறை
சிறுவன் சிபிக்கும் பப்பி மோடிக்கும் டு‌ம்,,, டு‌ம்,,,