டிஸ்லெக்சியா என்ற வாசித்தலில் ஏற்படும் தடுமாற்றம், கண்களால் பெறப்படும் எழுத்து வடிவங்களை அர்த்தமுள்ள மொழியாக மாற்றமுடியாத மூளையின் திறன் இன்மையாகும். இது குழந்தைகளுக்கு கற்றலின் போது ஏற்படும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாகும்.
இந்தியாவில் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக சிறப்பு கல்வி சேவைகளை பெறும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாசிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது.
ஒரு சாதாரண புத்தியுள்ள மற்றும் பார்வை நன்றாக உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட இந்த வாசிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேச்சில் எந்த ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேசுவதை புரிந்து கொள்வதிலும் எழுத்து மொழியை அறிவதிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பல் துறை புலனுணர்வு கல்வித் திட்டப் பயிற்சி முறை என்ற சிகிச்சை பலன் அளித்து வருகிறது. பெற்றோர்களின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பும் இதுபோன்ற குறையை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகளிடம் ஏற்படும் அறிகுறிகள் :
பள்ளிக்கு குழந்தைகள் செல்ல துவங்கும் முன் இந்த குறையை தெரிந்து கொள்வது அரிது. ஆனால் சில முந்தைய அறிகுறிகள் டிஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம். அதாவது உங்கள் குழந்தைகள் கேள்விகளுக்கு தாமதமாக பதில் அளிக்கலாம், புதிய வார்த்தைகளை பேசுவதில் தடுமாற்றம் ஆகியவை இருந்தால் டிஸ்லெக்சியா ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்ல துவங்கிய சில நாட்களில் உங்களுக்கு குழந்தைகளிடத்தில் வாசிப்புப் பிரச்சனை இருப்பது தெரியவரும்.
அச்சில் உள்ள எழுத்துகளை என்னவென்று கூறுவதில் சிரமம்.உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப பேச்சுத் திறன் இல்லாமல் அதனை விட குறைந்த நிலையில் உள்ள பேச்சுத் திறன் ஆகியவை டிஸ்லெக்சியா இருப்பதை அறிவுறுத்தலாம்.
|