முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > எழுச்சிக் கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோடையில் சிறப்பு அக்கறை
sun
webdunia photoWD
கோடை என்றால் நமக்கே வியர்த்துக் கொட்டி சருமம் வாடிவிடும். மெல்லிய சருமத்தைக் கொண்ட குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்?

இந்த கோடையில் குழந்தைகளுக்கு என சில சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஜொலிக்கும் வகை‌யி‌ல் உடலை உறு‌த்து‌ம் ஆடைகளைத் தவிர்த்துவிட்டு பருத்தி மற்றும் எளிதாக உடுத்தவல்ல ஆடைகளை மட்டுமே இந்த கோடையில் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அவ்வப்போது குடிக்க சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

உலர்ந்த திராட்டையை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்கவைத்து பின்னர் திராட்சை திப்பிகளை எடுத்துவிட்டு அந்த நீரை பருக அளிக்கலாம். உடல் சூட்டை இது தணிக்கும்.

குழந்தைகளை காலையிலும், மாலையிலும் குளிப்பாட்டலாம். இல்லாவிடில் ஒரு வேலை குளிக்க வைத்துவிட்டு, மறுவேளை சூடான நீரில் துணியைக் கொண்டு உடலை துடைத்து விடலாம்.

குழந்தைகளின் துணிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளின் கைகளை அவ்வப்போது கழுவி விடுவதும் நல்லது.
1 | 2  >>  
மேலும்
சிறுவன் சிபிக்கும் பப்பி மோடிக்கும் டு‌ம்,,, டு‌ம்,,,
குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்!
சாதிக்க வயது ஒரு தடையில்லை
இ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது!
குழந்தைகளின் திறமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்
கரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு!