'படுக்கை அறையில் தனது வலிமையைக் கூட்ட விரும்பும் ஆண்களுக்காக' என்று வயாக்ரா மாத்திரைகள் பற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஆனால் 'அதைச் சாப்பிடுபவர்கள் தங்களின் காதுகேட்கும் திறனை இழப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன' என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வயாக்ரா மட்டுமல்ல, அந்த வகையைச் சேர்ந்த சியாலிஸ், லெவித்ரா போன்ற மருந்துகளும் ஆண்களின் காதுகளை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை மருத்துவமனைக்கு 44 வயதான நபர் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு திடீரென காது கேட்கவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர் 15 நாட்கள் தொடர்ந்து வயாக்ரா மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார். அந்த மாத்திரைதான் காது கேட்கும்திறன் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வின் விவரங்கள் மருத்துவ ஆய்விதழ்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன.
அப்போது முதல் அமெரிக்க ஆய்வாளர்கள் வயாக்ரா வகை மாத்திரைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதில் கண்டறிந்த முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. இந்த மாத்திரிகைகளால் 29 பேர் தங்களின் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர்.
எனவே, வயாக்ரா, லெவித்ரா, சியாலிஸ் ஆகிய மாத்திரிகைகளின் அட்டைகளில் எச்சரிக்கைத் தகவலை அச்சிடுமாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மாத்திரைகளை முதன் முதலில் சோதனை செய்தபோது சிலரின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், ஆய்வாளர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
மாத்திரிகைகளுக்கும், குறைபாட்டிற்கும் தொடர்பில்லை என்று அவர்கள் நம்பினர். ஆனால் இப்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
''இதைச் சாப்பிட்டால் செவித்திறன் பாதிக்கப்படலாம்'' என்ற வாசகத்தை மாத்திரை அட்டைகளில் அச்சிடுமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
|