முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  மனோதத்துவம்
 
கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்றால்
விஞ்ஞானமா - மெய்ஞானமா?

நம் இதிகாசங்களும், புராணங்களும் இதே கருத்தைத்தான் சித்தரிக்கின்றன. மகாபாரதத்தில் பத்மவியூகம் அமைப்பதைப் பற்றி கண்ணன் பேச, கருவிலிருக்கும் அபிமன்யூ அதைக் கற்றான் என்கிறார் வியாசர். அதேபோல் ஹிரண்யனின் மனைவி லீலாவதி பிரகலாதனை கருவில் சுமந்திருந்த நேரம் நாரதர் கூறிய நல்ல ஆன்முக கருத்துக்களை அந்த கருவிலிருக்கும் குழந்தை "ம்" கொட்டி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாயோ தூக்கத்திலிருக்கிறாள். பிற்காலத்தில் அரக்கனக்குப் பிறந்த அந்த குழந்தை சிறந்த அறிவும், ஆன்மீக திறனும் கொண்டு விளங்குகிறது. இப்படி கருவிலிருக்கும் போதே கல்வியை கலைகளை பயின்றதை பல மெய்ஞானக் கதைகள் கூறுகின்றன. இவை கற்பனை, சாத்தியமில்லாத ஒன்று என்று அதைப் பலர் ஒதுக்கித் தள்ளினர்.

இன்று விஞ்ஞானம் அந்தக் கருத்துக்கள் உண்மை என்று நிரூபித்துள்ளது. கருவிலிருக்கும் குழந்தை நல்ல இசையைக் கேட்கும்போது அதன் அறிவுத்திறனும், மற்ற திறமைகளும் மேம்பட்டு விளங்குவதாக ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன.

கருவிலிருக்கும் குழந்தையின் செவிப்புலன் மிகவும் கூர்மையாக இருக்கிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. சிட்னியிலிருள்ள ராயல் மருத்துவமனையில் கர்ப்பிணியான அறுபது பெண்களை வைத்து மருத்துவர்கள் ஓர் ஆய்வு நடத்தினர். இந்த தாய்மார்கள் தினமும் நல்ல இசை, பிரசங்கங்கள் முதலியவற்றை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகள் பிறந்த மூன்று வயதானதும் இந்த குழந்தைகளின் அறிவுத்திறன், இசை ஆர்வம், குண இயல்புகள் முதலிய பரிசோதனை செய்யப்பட்டன.

இதேபோல நல் இசையை, பிரசங்கத்தை கேட்காத கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தைகளின் அறிவுத்திறனும் பரிசோதிக்கப்பட்டன.

நல்ல இசையையும், பேச்சுக்களையும் கருவில் இருக்கும்போது கேட்ட குழந்தைகள் அறிவுத்திறனும், இசை ஆர்வத்திலும் குண இயல்புகளிலும் மிகவும் மேம்பட்டிருந்தனர். நல்லிசையை கேட்காத குழந்தைகள் மந்த புத்தி உடையவர்களாக, வன்மையான குணம் கொண்டவர்களாக அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிக்கும் செய்தி என்ன? பிறக்கும் குழந்தை தைரியத்துடன், விவேகத்துடன் புத்திசாலியாக விளங்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள் அமைதியான சூழ்நிலையில் எப்போதும் இருக்க வேண்டும்.

வீரம், விவேகம், அறிவுத்திறன் வளர்க்கும் புத்தகங்கள் உரக்க காதில் கேட்கும்படி படிக்க வேண்டும். இதைக் கேட்கும் குழந்தை பிற்காலத்தில் அப்படியே உருவாகிறது.

கருவில் கற்கும் கல்வியும் கலைகளும்
காலம் தோறும் தொடரும் காவியம்
பிறவிகள்தோறும் பிரியாமல் தொடரும்
அன்னை வரையும் அற்புத ஓவியம்.

கல்வியும், கலைகளும் பயிலவேண்டிய காலம் மண்ணில் பிறந்த பிறகு அல்ல, அதற்கு முன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. இதனால்தான் அமைதியற்ற குடும்பங்களில் பிறக்கும் குழந்தை மனநோயாளியாகவோ, பயந்த சுபாவமுள்ளவராகவோ உலகில் ஜனிக்கிறது.

இதைப்பற்றி விரிவாக "கருவில் ஏற்படும் மன பாதிப்பு" என்ற புத்தகத்தில் காண்போம். அதனால் கருவைச் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன், மன அமைதியுடன் இருப்பது அவசியம்.

தாய்மார்களே! உங்கள் குழந்தையின் தலை எழுத்து குணநலன்கள் ஆகியவை கருவிலிருக்கும்போதே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன. அவன் நல்லவனாக பிறப்பதும், தலைவனாக உருவாவதும் உங்கள் கையில், உங்கள் குடும்பத்தாரின் கையில்தான் இருக்கிறது.

உங்களக்காக இல்லாவிட்டாலும், பிறக்கப் போகும் உங்கள் செல்வக் குழந்தைக்காக மன அமைதியுடன் இருக்க பழகிக்கொள்ளுங்கள். டென்ஷன் ஏற்படும் சூழ்நிலைகளை தவிருங்கள். நீங்கள் சாப்பிடும் உணவைவிட உணர்வுகளே - உங்கள் உணர்வுகளே மிகவும் முக்கியம்!

உங்கள் குழந்தை உங்களிடமிருந்து உணவை மட்டும் பெறவில்லை. உங்கள் உணர்வுகளையும் சேர்த்தே பெறுகிறது; பிரதிபலிக்கிறது என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்!

"எந்தக் குழந்தைகயும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே!
அவன் நல்லவனாவதும், தீயவனாவதும்
அனனைக் கருவினிலே, அன்னை வளர்ப்பினிலே!"


1| 2| 3
மேலும்
மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்
மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்