யாரெல்லாம் ரத்த தானம் அளிக்க கூடாது...
கர்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள்;
தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்;
போதைப் பொருள் பழக்கம் அல்லது பலரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள்;
வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்;
பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்தில் ரத்த தானம் செய்யக் கூடாது;
இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் அளிக்க இயலாது.
ரத்த தானத்தினால் பாதிப்பு உண்டா?
ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
ஆனால், ரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து ரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மட்டும் நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.
ரத்த தானம் பற்றிய மேலும் விவரங்கைளயும், ரத்தத்தின் அடிப்படை விஷயங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
|