ஆன்ஜியோஜெனிஸிஸ், கரு வளர்ச்சியில் முக்கியமான பணியை செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எலியில் சோதனை மேற்கொண்ட போது அடிப்பட்ட இரத்த நாளங்கள் குணமடையத் தொடங்கும் போது தான் சி1பி1 புரோட்டினைக் காணமுடிகிறது. சி1பி1 புரோட்டின் காணப்படாத எலிகள் காயம் எதுவும் ஏற்படாத வரையில் ஒரளவு நலத்துடன் இருப்பதாக லெஸ்லி பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சி1பி1 கண்டுபிடிப்பு , இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகளில் சிறந்ததாக தோன்றுகிறது. விபத்தினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளில் இருந்து விடுபட மிகப் பெரிய அளவில் எதுவும் செய்யாவிட்டாலும், நோயைக் குணமாக்கும் பணியில் இரத்த நாளங்களின் தேவையற்ற கூடுதல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் முகமது சையத் கூறியுள்ளார்.
கருவிழித்திரை, பின்னங்கால் ஆகியவற்றில் நடத்திய பரிசோதனையில் ஆன்ஜியோஜெனிஸிஸ் நிகழ்வுக்கு சி1பி1 புரோட்டின் முக்கியமானது என்பது தெரியவந்தது என்று கூறினர். இந்த இரண்டு நோய்களின் போதும் புதிய இரத்த நாளங்கள் வளர்ச்சியைக் இஸ்சிமியா கட்டுப்படுத்துகிறது.
விழித்திரை கோளாரை சரி செய்யும் போது கண்ணில் உள்ள இரத்த நாளங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதும், பின்கால்களில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கும் கட்டுப்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் அவசியமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த இரண்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்ஜியோஜெனிக் மருந்து முறையின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளதாக கூறினர். இந்த முறையில் சி1பி1 புரோட்டினின் உண்மையான பணி என்ன என்பது குறித்தும், வேதியல் வழிமுறைகளில் இரத்த நாளங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறதா என்றும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் மருத்துவர் லெஸ்லி பிரைஸ் கூறியுள்ளார்.
|