நமது உடலில் உள்ள தற்காப்பு முறையின் கட்டுப்பாட்டை மீறி ஆபத்து விளைவிக்கும் மூலக்கூறுகளைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயைக் குணப்படுத்தவும் ஒர் புதிய மூலக்கூறை புனித யூதா குழந்தைகள் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.
இதன் மூலம் முதல் வகை நீரிழிவு நோய், குடல்வீக்கம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். நோயாளி உடலின் தாங்கும் திறனுக்கு ஏற்ப தேவையான அளவில் சிகிச்சை அளிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சியின் போது, நமது உடலில் உள்ள டி செல்களைக் ஒழுங்குப் படுத்தும் தற்காப்பு சிறப்பு மூலக்கூறான லிம்போசைட்ஸ் இபிஐ3 மற்றும் II12எ என்ற இரண்டு புரோட்டின்கள் அடங்கிய புரோட்டின் கலவையை வெளியேற்றுவதைக் காண முடிந்தது. மிகவும் முனைப்புடன் செயலாற்றும் தற்காப்பு செல்களான எப்ஃக்டர் - டி- லிம்போசைட்சின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணியை இந்த புரோட்டின் கலவை மேற்கொள்கிறது. நோய் குறிப்புணர்த்தும் மூலக்கூறு கூட்டம் என்று அழைக்கப்படும் சைட்டோகின்ஸ் கூட்டத்தில் இந்த புதிய புரோட்டின் கலவையும் ஒன்றாகும்.
சைட்டோகின்ஸில் உள்ள செல்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நமது உடலில் உள்ள இந்த தற்காப்பு முறை சைட்டோஸின்கள் இண்டர்லீயுகின்ஸ் என்றழைக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டு பிடித்த புரோட்டின் கலவைக்கு இண்டர்லீயுகின்ஸ்-35 என்று பெயரிட்டுள்ளனர்.
பெரும்பாலான சைட்டோஸின்கள் நமது உடலில் உள்ள தற்காப்பு மூலக்கூறுகளை ஊக்கப்படுத்தி தாக்குதல் அல்லது வீக்கத்தை உண்டாகச் செய்கின்றன. தற்காப்பு முறை நடவடிக்கைகளை தடுப்பது அல்லது அடக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஒருசில குறிப்புணர்த்தும் மூலக்கூறில் ஐ.எல்-35 -ம் ஒன்றாகும்.
தொற்று நோயில் இருந்து தற்காப்புத் தன்மையை உருவாக்கும் சிகிச்சை முறையில் ஒழுங்குபடுத்தும் டி செல்களை திறமையாக கையாளுவது மிகவும் முக்கியமான ஒரு அடிப்படையாகும். அதற்கு இந்த ஐ.எல்-35 மிகவும் உதவும் என்று புனித யூதா குழந்தைகள் ஆராய்ச்சி மையத்தின் தொற்று நோய் தற்காகப்புத் துறை பேராசிரியர் டேரியோ விக்னாலி சுறினார்.
|