இய‌ற்கை வைத்தியம் | வியாதிகள் | கட்டுரைகள் | பாலியல் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள் | மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு | A(H1N1)
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » இய‌ற்கை வைத்தியம் » மூல‌த்‌தி‌ற்கு ஆவாரை மரு‌ந்தாகு‌ம் (Aavaarai | Verpatttai)
Feedback Print Bookmark and Share
 
ஆவாரை வேர்ப்படை, விஷ்ணுகிரந்தி இலை இந்த இரண்டையும் எலுமிச்சை அளவு அரைத்து பசும் பாலில் கலந்து 3 நாட்கள் குடிக்க, இரத்தம் கலந்து வருகின்ற வெள்ளை நோய் குணமாகும்.

ஆவாரைக் கொழுந்து, பூ, பட்டை இவற்றுடன் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் அறுகின் வேர் சூரணம் சேர்த்து அரைத்து, அதில் இரு விரல் அளவு எடுத்து அதை பசு நெய்யில் கலந்து 48 நாட்கள் உட்கொண்டுவர உள்மூலம் குணமாகும்.

ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணைவிட்டு வதக்கி ஒற்றடமிட மூலமுளை கருகும். அதனால் கடுப்பும், ஊறலும் தணியும்.

ஆவாரைக் கொழுந்தை அல்லி இலையுடன் சேர்த்து அரைத்து அரிசி கழுவிய நீரில் கலந்து பூசிவர, அக்கி, கொப்புளம் குணமாகும்.

ஆவாரம் பட்டையுடன் சுக்கு சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர, கை,கால் வீக்கம் குணமாகும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்