தோல் மேல் பாகம், கீழ் பாகம் என இரு பாகங்களைக் கொண்டது. உள்ளங்கை மற்றும் கால் பாதம் ஆகியவற்றில் மேல் பாகத்தில் கூடுதலாக ஒரு அடுக்கு இருக்கிறது. அது நாம் கடின வேலைகளைச் செய்யும் போது பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
குளிர் காலத்தில் உடலை சூடாகவும், கோடை காலத்தில் வியர்வைகளை சுரந்து உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் ஒரு அரிய வேலையை தோல் செய்கிறது.
எனவே நாம் நமது சருமத்தை சரியாகப் பாதுகாத்து வந்தால் நம்மை நோய்கள் அண்டாது.