வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்பு மெலிவு நோய் ஏற்படுகிறது என்பதை அறிவோம். ஆனால் அதனை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று கேள்வி எழும். பொதுவாக எலும்பு மெலிவு நோய்க்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. நோயின் தாக்கம் அதிகரித்த பின்பே உணர முடியும்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது உடலை நல்ல முறையில் பேணி பாதுகாத்தால் மட்டுமே எலும்பு மெலிவு நோயில் இருந்து தப்பலாம்.
காலை அல்லது மாலை வெயில் உடலில் படும்படி சிறிது நேரமாவது நடைப் பயிற்சி போக வேண்டும். அல்லது இளம் வெயிலில் நின்றபடி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
எலும்பு உறுதித்தன்மைக்கு காரணமான வைட்டமின்-டி மற்றும் சுண்ணாம்புச்சத்து கிடைக்க பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றுடன் முளை கட்டிய கொண்டைக் கடலையையும் சாப்பிட்டு வருவது நல்லது.
தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, வால்நட் பருப்பு ஆகியவற்றை அடிக்கடி உட்கொண்டு வருவதும் எலும்பை உறுதியாக்கும். |