யானைக் கால் நோய் கொசுக்களால் பரவும் மிகவுக் கொடிய நோயாகும்.
இந்நோய் குறித்து மருத்துவர் ஒருவரின் விளக்கத்தைக் காணலாம்,
ஊச்செரேரியா பேன்கிரஃப்டி எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணிகளால் யானைக்கால் நோய் உண்டாகிறது.
ஆண், பெண் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் இந்நோய் தாக்குகிறது. பொதுவாக கடலோரக் கிராமங்கள் மற்றும் நதிக்கரையோர கிராமங்களில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்நோய் பரவுவதற்கு முக்கியக் காரணம், கொசுக்கள் தான். இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தை கொசு உறிஞ்சும்போது, ரத்தத்தோடு சேர்ந்து அந்த ஒட்டுண்ணி புழுக்களும் கொசுவின் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது.
கொசுவின் உடலுக்குள் இருக்கும் இந்த புழு, சில நாட்களில் புழுக்களாக மாறிவிடுகிறது. மீண்டும் அந்த கொசு இன்னொரு மனிதனை கடிக்கும்போது, அந்த மனிதனின் ரத்தத்தில் இந்த புழுக்கள் நுழைந்துவிடுகின்றன. இதனால், யானைக்கால் நோய் உண்டாகிறது. |