பலரும் காலை உணவைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் கூறுவார்கள். அதில் ஒன்று உடல் எடையைக் குறைப்பதற்காக என்பது.
௦உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
மேலும், உடல் எடையை இழப்பதற்கு பதிலாக உடலின் சக்தியை மட்டுமே இழக்கிறது.
காலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள். |