காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது.
சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.
காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பதால் மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் இந்நிலையை தவறாகப் புரிந்து கொண்டு உடலின் BMR(Banal Metabolic Rate) ஐக் குறைத்து விட வாய்ப்புள்ளது. உடலுக்கு உணவு இல்லை. எனவே சக்தியும் இல்லை. ஆகையால் சக்தியின் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் க்ஷஆசு குறைக்கப்பட்டுவிடுவதால் உடல் குண்டாக வாய்ப்பு உள்ளது.
எனவே விரதம் என்றும், உடல் இளைக்க என்றும், நேரமில்லை என்றும் காரணம் சொல்லிக் கொண்டு காலையில் சாப்பிடாமல் இருப்பவர்கள் இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
உங்கள் சிந்தனைக்கு....
1. 1 கிலோ எடை கூடினால் 9000 கலோரி அதிகமான உடலில் சேர்ந்துள்ளது என்று அர்த்தம்.
2. 1 கிலோ எடையை குறைக்க 9000 கலோரி உடலில் குறைக்க வேண்டும்.
3. 1 கிராம் கொழுப்பு 9 கலோரி
4. தினமும் காலை இரவு 1 இட்லி அல்லது 1 தோசை குறையுங்கள்.
65+65=130 கலோரி
தினமும் 130 கலோரி ஓ 30 நாட்கள்=3900
மாதத்தில் உடற்பயிற்சி தினமும் 3/4 மணி நேரம் நடந்தால்
150 வடி 200 கலோரி 30=6000
மொத்தமாக 9900 கலோரி=1 கிலோ எடை குறையும்(உத்தேசமாக)
|