கவலை, பதட்டம், பயம், ஆளுமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் தான் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதற்கான மருந்து மன அமைதியும் ஓய்வுமே ஆகும். இதை நம்மில் பலர் கடைபிடிப்பது கிடையாது. மேலும் உணவு முறை மாற்றம், எடை அதிகரிப்பு, அதிகமாக மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவற்றாலும் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. இது "எசென்ஷியல் ப்ளட்பிரஷர்" எனப்படுகிறது. இவற்றை தவிர்க்க உணவு முறையில் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும், மது, புகையினைத் தவிர்ப்பதுமே சிறந்த வழியாகும்.
நம் உடலில் உள்ள உறுப்பு சார்ந்த வேறு சில நேரங்களுடனும் இரத்தக் கொதிப்பு வருகின்றது. இது இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
|