முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  வியாதிகள்
 
இரத்தக் கொதிப்பும் உடல் பாதிப்புகளும்
இரத்தக் கொதிப்பும் உடல் பாதிப்புகளும்
Webdunia
உலகளவில் அதிகமாக பேசப்பட்டு வரும் வியாதிகளில் மிக முக்கியமானது ரத்தக்கொதிப்பும், நீரிழிவு நோயும் தான். இதனால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இதற்கு காரணம் மக்களிடம் தகுந்த விழிப்புணர்வு இல்லாதது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் இரத்தக் கொதிப்புக்கான காரணங்களையும் இரத்தக் கொதிப்பால் இதயம் எவ்வாறு பாதிப்பு அடைகிறது என்பதனையும் காண்போம்.

நம் உடலின் இரத்த ஒட்டத்தினை சீரான நிலையில் செயல் படுத்துவது இதயம். அதனால் இதயம் சுருங்கி விரிவடையும். இரத்தக் குழாயின் அழுத்தத்தையும் கொண்டே இரத்தக் கொதிப்பு கணக்கிடப்படுகிறது. இரத்தக் கொதிப்பு உயர் இரத்த அழுத்தம் என்று சொல்வதை விட "சத்தமில்லாமல் கொல்வது" என்று தான் சொல்ல வேண்டும். நீரிழிவு நோய் நம் உடலுக்குள் எவ்வாறு இருந்து நம்மை கொஞ்ச கொஞ்சமாக கொல்கிறதோ அது போல இரத்தக் கொதிப்பும் "சத்தமில்லாமல் கொல்லக் கூடியது".

நல்ல ஆரோக்கியமான உடலின் இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவிலேயே இருக்கும். இந்த அளவில் எப்போது மாற்றம் ஏற்படுகின்றதோ அது தான் உயர் இரத்த அழுத்தம் அதாவது இரத்தக் கொதிப்பு (Hyper Tension) எனப்படும்.

இந்த இரத்தக் கொதிப்புப் பற்றி தஞ்சை ரோகிணி மருத்துவமனையின் சிறப்பு சிறுநீரக மருத்துவர் மரு.நா.மோகன்தாஸ் இதோ விளக்குகிறார்...

இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை மனிதர்களை இயந்திரமாக மாற்றி விட்டது. தனக்கு இரத்தக் கொதிப்பு இருப்பது தெரிந்தும் பலர் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மேலும் பலர் எடுக்கும் சிகிச்சையை தொடர்வதில்லை. இதன் விளைவு நமது மூளை, கண்கள், சிறு நீரகங்கள், இதயம் இவற்றிற்குச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் சுருங்கியோ அல்லது அடைப்பட்டு தடைபடுமேயானால் அப்போது உயர் இரத்த அழுத்தம் "சத்தமில்லாமல் கொல்கின்ற உயிர் கொல்லியாக" மாறுகின்றது.
மேலும்
இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
புற்று நோயும் கிச்சன் தவறுகளும்
பெண்களுக்கு வரும் தைராய்ட் நோய்
கர்ப்ப காலத்தில் வரும் காமாலை நோய்
பயத்தால் ஏதும் பயன் இல்லை
துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு