இதற்கு என தனியாக எந்த அறிகுறியும் இல்லை. வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளைப் போல்தான், வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்பசமாக இருப்பது போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த நோய்க்கு முக்கியக் காரணமாக இருப்பது மன உளைச்சல்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், மன உளைச்சலினால் பாதிக்கப்படுவர்கள்தான் இந்த நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சினைனகளை எதிர்கொள்ளும் 70 விழுக்காட்டு பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.
எனவே, மேற்கூறிய அறிகளிலில் 4க்கும் மேற்பட்டவை உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
முதலில் தனக்கு வந்திருப்பது குடல் உளைச்சல் நோய்தான் என்பதை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன உளைச்சல், அழுத்தம் அதிகமாக இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். கவலைகளை குறைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம் தனது பிரச்சினைகளைக் கூறி ஆலோசனை பெறலாம்.