கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம். அதேப்போலத்தான் வெயிலால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிப்பதும் பெரும் பிரச்சினையாகிவிடுகிறது.
அதுவும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வேறு ஆரம்பித்துவிட்டது. இனி வெயிலின் கொடுமையை சொல்லவே வேண்டாம்.
பிரச்சினை வந்த பிறகு அதனை போக்குவது கொஞ்சம் சிரமம்தான். அதனால் கோடையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையையும் பழக்க வழக்கங்களையும் சரியாக அமைத்துக் கொண்டால் ஓரளவிற்கு சமாளித்துவிடலாம்.
அதற்காக ஒரு சில குறிப்புகள் இங்கே...
தண்ணீர் அதிகமாக பருக வேண்டும்
இதைச் சொல்ல வேண்டியதே இல்லை. சாதாரணமாகவே தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த வெயிலில் இருந்து உடலின் சீர் தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அடிக்கடி தண்ணீரை பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் என்றால் மிகக் குளிர்ச்சியான தண்ணீர் அல்ல... சுத்தமான, சுடவைத்து நன்கு ஆற வைத்த தண்ணீரே உடலுக்கு ஏற்றது. குளிர்ச்சியான தண்ணீரை வெயிலில் தவிர்ப்பதே சிறந்தது.
தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவையும் உடலில் தண்ணீர் தன்மையத் தக்க வைக்க உதவும்.
உடனடி மாற்றம் வேண்டாம்
கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று நேராக குளிர்சாதன வசதி கொண்ட அறைக்குள் நுழைய வேண்டாம். சமநிலை வெப்பநிலை நிலவும் ஓரிடத்தில் சற்று நேரம் நின்றுவிட்டு பின்னர் அறைக்குள் நுழைவது சிறந்தது.
அதேப்போலத்தான் வெளியில் சென்றுவிட்டு வந்ததும் குளிர்ச்சியான நீரை அதிக அளவில் பருக வேண்டாம்.
மதியம் வேளையில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் போட்டு முகத்தை கழுவுவதும் தவறு. நன்கு வியர்த்துக் கொண்டிருக்கும் போது அதனை உடனடியாக...
|