இளைஞர்கள் அதிக அளவில் மீன் சாப்பிட்டால் மன அழுத்தம் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஓமேகா -3 அமிலங்கள் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும் , எண்ணெயிலும் அளவுக்கு அதிகமான ஓமேகா -6 அமிலங்கள் காணப்படுவதாகவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை அதிகமாக சாப்பிடும் இளைஞர்களுக்கு மன அழுத்தம் உருவாகும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் இளைஞர்கள் சத்தான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து கொள்ள நல்ல வழிகாட்டுவதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மருத்துவர் ராஸ் கிராண்ட் கூறியுள்ளார். இளைஞர்களைப் போன்றே குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியம் இல்லாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவு கடல் உணவுகளை சாப்பிடும் இளைய சமுதாயத்தினரிடையே அதிக அளவில் மன அழுத்த நோய் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். உணவு சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆராய்ச்சி, இளைஞர்களை எப்படி பாதிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை மனிதன் சரியான விகிதத்திலேயே சாப்பிட்டு வருவதாகவும், ஆனால் அண்மைக் காலமாக பிரபலமாகியுள்ள மேற்கத்திய உணவு வகைகளில் இது சற்று கூடுதலாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஓமேகா -3 அமிலங்கள் மூளை வளர்ச்சி உள்ளிட்ட பிற செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது.
மீன் எண்ணெய் மாத்திரைகள், மீன்களும் ஒரே வேலையைத் தான் செய்வதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமேகா -3 அமிலங்கள் இரத்தம், திசுக்களின் திறனை அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|