வெந்தயம் என்றதும் ஏதோ கசப்பானது என்று முகம் சுளிக்க வேண்டாம். வெந்தயம் சேர்த்து செய்யும் எந்த சமையலும் மிக ருசியாக இருக்கும் என்பதை இந்த வெந்தய இட்லி மூலம் அறிவீர்கள்.
புழங்கல் அரிசி - 3 ஆழாக்கு வெந்தயம் - ஒரு கைப்பிடி ஆமணக்கு விதை - 5 உப்பு
செய்யும் முறையப் பார்க்கலாமா... அரிசியையும் வெந்தயத்தையும் தனித்தனியே ஊறவைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை அரைத்துக் கொள்ளுங்கள். பாதி அரைபடும்போதே ஆமணக்கு விதைகளைத் தோலுரித்துச் சேருங்கள். நன்கு அரைபட்டதும் மாவை வழித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைத்தெடுங்கள். பிறகு அதை மாவில் கலந்து உப்பு சேர்த்துக் கரைத்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்கவிடுங்கள். புளித்த பின் இட்லித்தட்டில் மாவை ஊற்றி வேகவைத்து எடுங்கள்.
சுவையான வெந்தய இட்லி தயார். எப்போதும் போல சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுங்கள். உடல் சூட்டையும் தணிக்கும்.
|