அரிசியையும் ரவையையும் சேர்த்து தோசை மட்டும் தானே செய்திருப்பீர்கள். இப்போது அரிசி ரவை இட்லி செய்து பார்க்கலாமா தேவையானவை புழுங்கலரிசி ரவை - 2 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி ரவை வேண்டுமானால்... புழங்கல் அரிசியை நன்கு சுத்தம் செய்து ஊறவைத்து உலர்த்துங்கள். அரிசி நன்கு உலர்ந்ததும் அதனை நன்கு ரவை ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக காய்ந்த அரிசி என்றால் 1 அல்லது 2 மாதத்திற்கு கூட அரிசி ரவையை வைத்துக் கொள்ளலாம்.
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள்.
அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கலந்து கொள்ளுங்கள்.
இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள்.
மாவு நன்கு புளித்தவுடன் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள்.
என்ன ஹோட்டல் இட்லி ஞாபகம் வருதா, ஆம் அதேதான்.
|